Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுங்கியோடு வந்து.. திண்டுக்கல் ரோட்டில் ஒரே பரபரப்பு.. "இயேசப்பா - கர்த்தாவே".. சார் யாருனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டமே அதிர்ந்து போய் உள்ளது.. இந்த நபர் யார்? எங்கே இருக்கிறார்? என்று தெரியவில்லை.. போலீசாரும் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி என்ற இடத்தில், செயின்ட் பிரான்சிஸ் சர்ச் ஒன்று அமைந்துள்ளது... சுற்றுவட்டார பகுதியிலிருந்து இந்த சர்ச்சுக்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.. அதனால், இந்த பகுதியிலேயே இது மிகவும் பிரசித்தி பெற்ற தேவாலயம் ஆகும்..

Dindigul Church and Do you know why did young man take the church hundiyal what happened in Mullipadi

உண்டியல்: தினமும் ஏராளமானோர் சர்ச்க்கு வந்து செல்லும்நிலையில், அங்கிருக்கும் உண்டியலிலும் காணிக்கையை செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.. ஒருகுறிப்பிட்ட நாளில், காணிக்கையை தேவாலய பணிகளுக்காக பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, இந்த உண்டியலில் செலுத்தும் பணம் காணாமல் போய்கொண்டே இருந்ததாம்.. உண்டியலில் போடும் பணம் எங்கே மாயமாகிவிடுகிறது? என்று சர்ச்சில் உள்ள நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியும் குழப்பமும் மேலிட்டது.

அதிர்ச்சி: இதனால், சர்ச்சில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படியே, கடந்த மாதம் 29-ம் தேதி, தேவாலய நிர்வாகிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்..

உண்டியல் பணம் நீண்ட நாட்களாகவே மாயமாகியிருந்ததால், கேமராவை பின்னோக்கி ஓடவிட்டு ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அந்த நபர் சிக்கினார்.. டி-ஷர்ட் லுங்கியுடன் சர்ச்சில் நுழைவதை தேவாலய நிர்வாகிகள் பார்த்தனர்.. ஆனால், அந்த சர்ச்சில் அவரை இதற்கு முன்பு யாரும் பார்த்தது கிடையாது என்பதால், கேமராவில் அந்த நபரின் மீது சந்தேகம் வந்தது..

Dindigul Church and Do you know why did young man take the church hundiyal what happened in Mullipadi

வீடியோ: தொடர்ந்து அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, சர்ச்சுக்குள் நுழைந்த அந்த நபர், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தார்.. பிறகு, இயேசு நாதர் சிலை முன்பு மண்டியிட்டு ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.. நீண்ட நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, சர்ச்சுக்குள் சுற்றுமுற்றும் ஒரு நோட்டம் விட்டார்.. தேவாலயத்தில் யாருமில்லை என்பது தெரிந்ததுமே, டக்கென அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை எடுத்து, தன்னுடைய டி-ஷர்ட் பாக்கெட்டுக்குள் திணித்துவிட்டார்.

இவர் பாக்கெட்டுக்குள் பணத்தை திணித்தபோது, திடீரென ஒரு பெண் சர்ச்சுக்குள் பிரார்த்தனை செய்ய நுழைந்தார்.. அந்த பெண்ணை பார்த்ததுமே, மறுபடியும் முழங்காலிட்டு ஜெபம் செய்வது போல நடிக்க ஆரம்பித்துவிட்டார் டி-ஷர்ட் நபர்.. பிறகு மெதுவாக அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இது அத்தனையும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்ததை பார்த்து தேவாலய நிர்வாகிகள் உறைந்துபோனார்கள்.

ஆதாரங்கள்: உடனே இந்த வீடியோ ஆதாரத்துடன் திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.. இந்த கொள்ளை தொடர்பாக புகாரும் தந்தார்கள். போலீசாரும் இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

போலீசார் இந்த வீடியோவை பார்த்தபிறகுதான் தெரிந்தது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே பல இடங்களில் திருடியவராம்.. இதே சர்ச்சுக்கு வந்து பலமுறை உண்டியலில் இருந்து காசு எடுத்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.. ஒவ்வொருமுறை சர்ச்சுக்கு வரும்போதும், கர்த்தரின் முன்பாக மண்டியிடடு, பாவ மன்னிப்பி கேட்டுவிட்டு, அதற்கு பிறகே, உண்டியலில் இருந்து காசு திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் கண்டுபிடிப்பட்டுள்ளது. அதுவும், மெழுகுவர்த்தியை ஏத்தி வைத்துவிட்டுதான் திருடுவாராம்.

மெழுகுவர்த்தி: இவர் அதே ஏரியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. அதனால், கேமராவில் பதிவான அவரது அடையாளத்தை வைத்து போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..

காணிக்கையை திருடிக்கொண்டு போகும் இந்த நபரின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கர்த்தரிடம் வேண்டிக்கொண்டு, பயபக்தியுடன் வந்து சென்ற அந்த நபர் யாருன்னு தெரியலையே.. ஏசப்பா...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+