போஸ்டரில் திண்டுக்கல் நிர்வாகிகள் பெயர் விடுபட்டதற்கு நான் பொறுப்பு அல்ல- ஐ. லியோனி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை குறித்து திண்டுக்கல் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் துணை பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார், சக்கரபாணி பெயர்கள் இடம்பெறாமல் இருந்தன.

Dindigul I Leoni explains on Posters

இதற்கு திண்டுக்கல் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் லியோனியின் பெயரும், படமும் கிழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமது முகநூல் பக்கத்தில் ஐ.லியோனி விளக்கம் அளித்துள்ளார்.

Dindigul I Leoni explains on Posters

அதில் ஐ. லியோனி கூறியிருப்பதாவது: நான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்று அதற்கான திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட நன்றி அறிவிப்பு போஸ்டரில் கழக துணை பொது செயலாளர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஐ.பி. செந்தில்குமார், இரா.சக்ரபாணி அவர்கள் பெயர் இடம்பெறாமல் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

Dindigul I Leoni explains on Posters

எங்கள் மாவட்ட தலைவர்கள் மீது நிறைந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன் நான். தொடர்ந்து அவர்களோடு இணைந்து பணியாற்றுவேன் இது உறுதி என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்கள் அனைவரது பெயருடனான புதியதாக வடிவமைக்கப்பட்ட போஸ்டரையும் லியோனி தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+