குடும்பத்துக்கே இதுதான் வேலை? திண்டுக்கல்லை திணற வைத்த காருண்யா! விசாரணையில் வெளிவந்த ட்விஸ்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்து சேர முயன்ற மாணவி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவியின் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் முறைகேடு செய்து சேருவதற்கு முன்பே கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் முறைகேடாக சேர முயற்சித்து, அதற்காக வழக்கு பதிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடியின் பின்னணியில் மேலும் சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதர். 55 வயதான இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி. பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நீட் தேர்வை எழுதிய காருண்யா ஸ்ரீவர்ஷினி 228 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை.

நீட் மோசடி
ஆனாலும், மருத்துவம் படிக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் காருண்யா ஸ்ரீவர்ஷினி. இதனால், பெற்றோர் மற்றும் நீட் முறைகேடு கும்பலுடன் இணைந்து 456 மதிப்பெண் பெற்றதாக நீட் போலி மதிப்பெண் சான்றிதழ், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கான போலியான சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்துள்ளார். தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுரியில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அட்மிசன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி
தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீவர்ஷினி, நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துவப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி பொறுப்பு முதல்வர் வீரமணி கொடுத்த புகார் படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், விசாரணை நடத்தி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 7ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, காருண்யா ஸ்ரீவர்ஷினி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சித்து இருப்பதும், அங்கு போலியான நீட் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் போலியான இட ஒதுக்கீடு சான்றிதழ் கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்ததை அறிந்து அருகில் உள்ள ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் விசாரணை செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது காருண்ய ஸ்ரீவர்ஷினி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு சான்றிதழ்களை வைத்து சேர்ந்து கைதானது தெரியவந்துள்ளது. மேலும், மாணவி காருண்யா ஸ்ரீ வர்ஷினிக்கு உதவிய நீட் முறைகேடு கும்பல் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications