திண்டுக்கல் அய்யலூரில் பணியில் இருந்த வனத்துறை அதிகாரி.. திடீரென சுருண்டு விழுந்து நடந்த விபரீதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் வன அலுவலராக பணியாற்றி வந்த வனத்துறை அதிகாரி மணிகண்டன் என்பவர் பணியின் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதேபோல் அதன் அருகே உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதுரை இன்ஜினியர் விபத்தில் உயிரிழந்தார். ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த இரண்டு அரசு அதிகாரிகள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலமடை மறைமலை அடிகள் தெருவை சேர்ந்த 52 வயதாகும் மணிகண்டன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் வன அலுவலராக வேலை செய்து வந்தார். இவருக்கு சுஜா (45) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மணிகண்டனின் குடும்பத்தினர் சொந்த ஊரான மதுரையிலேயே வசித்து வருகிறார்கள். மணிகண்டன் அய்யலூரில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மணிகண்டன் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக பணியாளர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வனக்காப்பாளர் மீனாட்சி, வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பணியில் இருந்த வன அலுவலர் திடீரென இறந்த சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அய்யலூரில் வனத்துறை அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அதன் அருகே உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதுரை இன்ஜினியர் விபத்தில் உயிரிழந்தார். பெஞ்ஜல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகராட்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
லாரியை மதுரை மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்த 33 வயதாகும் கற்பக ராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரியில் மதுரை மாநகராட்சியில் இன்ஜினீயராக பணியாற்றி வந்த ரமேஷ் பாபு (வயது 55) என்பவரும் நிவாரணப்பொருட்களுடன் சென்றார். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அய்யப்பன் கோவில் அருகே லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலை மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கிய மாநகராட்சி இன்ஜினீயர் ரமேஷ் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த கற்பக ராஜா மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications