சூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி? வெடித்தது சர்ச்சை. 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்..
கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றதாக இருவருக்கும் வனத்துறை அபராதம் விதித்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு கடந்த மார்ச் 3வது வாரம் முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல கொடைக்கானலில் அனுமதி அளிக்கப்படவில்லை. அத்துடன் அங்குள்ள தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

கொடைக்கானல்
இந்நிலையில் நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் சென்று தங்கி இருக்கிறார்கள். பின்னர் அங்குள்ள பின்பு வனத்துறையினரின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குச் சென்று இருக்கிறார்கள். அந்த ஏரியில் சூரி மற்றும் விமல் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வனக்காவலர்கள் சஸ்பெண்ட்
இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி இருவருக்கும் அபராதம் விதித்தபின்னர் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இபாஸ் எடுத்து செல்வது கடினம்
இது ஒருபுறம் எனில் கொடைக்கானலுக்கு நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இ பாஸ் இல்லாமல் யாரும் இங்கு வர இயலாது. இ பாஸ் எடுத்து வருவதாக இருந்தாலும், திருமணம், மருத்துவ அவசரம், மரணம், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமே வர இயலும். இதுதான் தற்போதைய விதியாக உள்ளது. இதனால் எப்படி இருவரும் கொடைக்கானலுக்கு வந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

விசாரணை துவங்கியது
இதனிடையே பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல நடிகர்கள் சூரி சென்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்தனர் என்றும், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக கூறினார். விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications