’அங்க’ மட்டும் போயிடாதீங்க.. பாக்கெட்டை பதம் பார்க்கும் மசாஜ் சென்டர்கள்! கொடைக்கானலில் குமுறல்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கும் நிலையில் அப்பாவி சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு எழுந்திருக்கிறது. எனவே அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது.

dindigul kodaikanal crime

மேலும், கொடைக்கானலின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் போதை காளான், கஞ்சா ஆகியவை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சட்டவிரோத சம்பவங்களும் அதிகளவில் நடக்கின்றன.

தொடர்ந்து கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் அடிக்கடி வனத்துறையினரும் காவல்துறையினரும் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சில தங்கும் விடுதி நிர்வாகங்களே நேரடியாக சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் போதை காளான் விற்பனையும் நடைபெற்று வருவதாகவும், மேலும் மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும். மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கும் நிலையில் அப்பாவி சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு எழுந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற சிலர் கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கிவரும் கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவரின் மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மசாஜ் செய்த பெண்களை அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சென்னை இளைஞர்களுக்கும் , மசாஜ் சென்டர் பணி பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து, சாலையில் பயந்து ஓடி உள்ளனர். இருந்த போதும் அந்த பெண்களை விடாமல் அந்த இளைஞர்கள் பின் தொடர்ந்து வீடியோ எடுத்தபடியே சுமார் 500 மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து அந்த பெண்கள் தங்கி இருந்த குடியிருப்பு வீடு வரை சென்றுள்ளனர். இதுதொடர்பாக அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழில் நடப்பதாக பகீர் புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர்கள் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், அங்கு சிக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் மிரட்டி பணம் பறிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

கொடைக்கானலில் நிறைய இடங்களில் மசாஜ் மசாஜ் சென்டர்கள் இயங்கி வரும் நிலையில், அவை அரசாங்க அனுமதி பெற்று ஏங்கி வருகிறதா என்னும் கேள்வி மற்றும் சந்தேகங்கள் பொது மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் மசாஜ் சென்டர்களில், பெண்களுக்கு பெண்களும், ஆண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் விதத்தில் இயங்கி வந்தால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாது என்றும் கூறும் சமூக ஆர்வலர்கள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+