மாய மந்திரத்தால் கரண்ட்டை சீர் செய்ய முடியாது: திண்டுக்கல் சீனிவாசன்
மாய மந்திரத்தால் கரண்டை சீர் செய்ய முடியாது என அமைச்சர் கூறினார்.
Recommended Video

திண்டுக்கல்: மாய மந்திரத்தால் கரண்டை சீர் செய்ய முடியாது கொடைக்கானலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கஜா புயலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று கொடைக்கானல். இந்த வழியாகத்தான் புயல் கரையை கடந்த நேரம் சூறாவளி காற்று அடித்தது.
இதனால் திண்டுக்கல் மாவட்டடத்தில் மட்டும் 7 பேர் புயலுக்கு உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.250 கோடி நிவாரண உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

168 கிராமங்கள்
இந்த உதவியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, "பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இந்த மாவட்டத்தில் மட்டும் 168 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

14 கிராமங்கள்
இந்த மாவட்டத்தில் 1098 உயரழுத்த மின்கம்பங்களும் 4,196 குறைந்தழுத்த மின்கம்பங்களும் சேதம் ஆகிவிட்டிருந்தது. ஆனால் எல்லாம் சீர்செய்யப்பட்டு பெரும்பாலும் எல்லா இடங்களுக்கு கரண்ட் வந்துவிட்டது. கொடைக்கானலில் மட்டும் இன்னும் 14 கிராமங்கள்தான் பாக்கி.

ஐஸ் வைக்கவில்லை
அங்கேயும் வேலை நடந்து வருகிறது. சும்மா சொல்லக்கூடாது, மாவட்ட கலெக்டர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். இது ஒன்றும் அவரை ஐஸ் வைக்க நான் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை" என்றார்.

மாயமந்திரமா?
இதனையடுத்து செய்தியாளர்கள், "கொடைக்கானல் முழுசும் கரண்ட் வருவதற்கு எவ்வளவுநாள் ஆகும்?" என்று கேட்டனர். அதற்கு அமைச்சர், "மாய மந்திரத்தால் எதையும் செய்துவிட முடியாது. மின் இணைப்பு கிடைக்கத்தான் வேலைகள் சீரமைப்புப்பணிகள் நடந்து வருகிறது. கரண்ட் இல்லாத பகுதிகளில்கூட ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இருந்தாலும் விரைவில் எல்லா பகுதிக்கும் கரண்ட் வந்துவிடும்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications