மாய மந்திரத்தால் கரண்ட்டை சீர் செய்ய முடியாது: திண்டுக்கல் சீனிவாசன்
மாய மந்திரத்தால் கரண்டை சீர் செய்ய முடியாது என அமைச்சர் கூறினார்.
Recommended Video

திண்டுக்கல்: மாய மந்திரத்தால் கரண்டை சீர் செய்ய முடியாது கொடைக்கானலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கஜா புயலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று கொடைக்கானல். இந்த வழியாகத்தான் புயல் கரையை கடந்த நேரம் சூறாவளி காற்று அடித்தது.
இதனால் திண்டுக்கல் மாவட்டடத்தில் மட்டும் 7 பேர் புயலுக்கு உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.250 கோடி நிவாரண உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

168 கிராமங்கள்
இந்த உதவியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, "பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இந்த மாவட்டத்தில் மட்டும் 168 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

14 கிராமங்கள்
இந்த மாவட்டத்தில் 1098 உயரழுத்த மின்கம்பங்களும் 4,196 குறைந்தழுத்த மின்கம்பங்களும் சேதம் ஆகிவிட்டிருந்தது. ஆனால் எல்லாம் சீர்செய்யப்பட்டு பெரும்பாலும் எல்லா இடங்களுக்கு கரண்ட் வந்துவிட்டது. கொடைக்கானலில் மட்டும் இன்னும் 14 கிராமங்கள்தான் பாக்கி.

ஐஸ் வைக்கவில்லை
அங்கேயும் வேலை நடந்து வருகிறது. சும்மா சொல்லக்கூடாது, மாவட்ட கலெக்டர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். இது ஒன்றும் அவரை ஐஸ் வைக்க நான் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை" என்றார்.

மாயமந்திரமா?
இதனையடுத்து செய்தியாளர்கள், "கொடைக்கானல் முழுசும் கரண்ட் வருவதற்கு எவ்வளவுநாள் ஆகும்?" என்று கேட்டனர். அதற்கு அமைச்சர், "மாய மந்திரத்தால் எதையும் செய்துவிட முடியாது. மின் இணைப்பு கிடைக்கத்தான் வேலைகள் சீரமைப்புப்பணிகள் நடந்து வருகிறது. கரண்ட் இல்லாத பகுதிகளில்கூட ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இருந்தாலும் விரைவில் எல்லா பகுதிக்கும் கரண்ட் வந்துவிடும்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications