கொடைக்கானல் போறீங்களா? சுற்றுலா பயணிகளே உஷார்! இதை செஞ்சா கடுமையான தண்டனை கன்பார்ம்!
திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிக்க முற்படும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. சென்னை, திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள குளம், குட்டைகள் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் என மேற்கு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் புதிய அருவிகள் உருவாகியிருக்கின்றன.

மேற்கு மாவட்டங்களிலேயே இப்படி எனில், கொடைக்கானலில் சொல்லவே வேண்டாம். கனமழை காரணமாக புதிய அருவிகள் உருவாகியிருப்பதால் அதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். குறிப்பாக அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு போக சுற்றுலா பயணிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அருவி ஆபத்தானது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுவரை இந்த அருவியில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனவே புதிய அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சுமார் அஞ்சு அருவியில், பொள்ளாச்சியை சேர்ந்த சுமார் 11 பேர் குளிக்க சென்றனர். இதில் நந்தக்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் எதிர்பாராத விதமாக அருவிக்கு அடியில் சிக்கிக்கொண்டார். அவரை இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தொடர் உயிரிழப்புகள் காரணமாக இந்த அருவி, சுற்றால தளம் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக வருவாய் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிக்க முற்படும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அத்தகைய அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications