கொடைக்கானல் போறீங்களா? சுற்றுலா பயணிகளே உஷார்! இதை செஞ்சா கடுமையான தண்டனை கன்பார்ம்!
திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிக்க முற்படும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. சென்னை, திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள குளம், குட்டைகள் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் என மேற்கு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் புதிய அருவிகள் உருவாகியிருக்கின்றன.

மேற்கு மாவட்டங்களிலேயே இப்படி எனில், கொடைக்கானலில் சொல்லவே வேண்டாம். கனமழை காரணமாக புதிய அருவிகள் உருவாகியிருப்பதால் அதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். குறிப்பாக அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு போக சுற்றுலா பயணிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அருவி ஆபத்தானது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுவரை இந்த அருவியில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனவே புதிய அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சுமார் அஞ்சு அருவியில், பொள்ளாச்சியை சேர்ந்த சுமார் 11 பேர் குளிக்க சென்றனர். இதில் நந்தக்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் எதிர்பாராத விதமாக அருவிக்கு அடியில் சிக்கிக்கொண்டார். அவரை இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தொடர் உயிரிழப்புகள் காரணமாக இந்த அருவி, சுற்றால தளம் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக வருவாய் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி உள்ளிட்ட அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிக்க முற்படும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அத்தகைய அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications