எம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு
திண்டுக்கல்: எம்.ஜி.ஆர். உங்களுக்கு தாத்தா என்றும், ஜெயலலிதா பாட்டி என்றும் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பெரும் சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், விழா மேடையில் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ''நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'' என்ற பாடலையும் பாடி அசத்தினார்.

விளையாட்டுத் திட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது நகைப்புக்குரியதாக இருந்தது. வழக்கமான தனது பாணியில் அவர் பேசியது மாணவர்கள் இடையே பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர். தாத்தா
மாணவர்களை பார்த்து எம்.ஜி.ஆர். யாரென்று தெரியுமா என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்க, மானவர்கள் தெரியும் என்றனர். எப்படி என அமைச்சர் மீண்டும் கேட்டதற்கு சினிமாவில் நடித்திருக்கிறார் அல்லவா அதன் மூலம் என மாணவர்கள் பதிலளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சீனிவாசன், எம்.ஜி.ஆர். உங்களுக்கு தாத்தா வேண்டும் என்றும், அதேபோல் ஜெயலலிதா பாட்டி எனவும் மாணவர்களிடம் தெரிவித்தார்.

பாடல்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வெள்ளந்தியான பேச்சை கேட்டு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் கொள்ளென சிரித்தனர். மேலும், நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என அவர் பாடல் பாடியது அங்கிருந்த அனைவரையுமே சிரிக்க வைத்தது.

கலகலப்பு
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் இப்போது எம்.ஜி.ஆர். தாத்தா, ஜெயலலிதா பாட்டி என மாணவர்களிடையே அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications