சிறை வாசத்தில் இருந்த இறைவன்! சுதந்திர காற்றை வழங்கியது திமுக அரசு! அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்.!
திண்டுக்கல் : திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ 2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிறை வாசத்தில் இருந்த இறைவனுக்கே சுதந்திர காற்றை வழங்கியது திமக அரசு தான் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்கள் கும்பாபிஷேகம் செய்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்நிலையில் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சேகர்பாபு
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 12 வருடங்களுக்கு மேல் ஆன கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு என ரூ 100 கோடி நிதி நடப்பு நிதி ஆண்டில் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் போடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சாதனை
தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. பழனியில் இரண்டு வருடங்களுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

சாமி சிலைகள் மீட்பு
தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்ககப்பட்டு உள்ளது . மேலும் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலைகளை விரைவில் தமிழக. கொண்டு வரப்படவுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமூக நீதி காக்கும் அரசு
மேலும் பல கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்படும் தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் அனைவருக்கும் சமம் தனியார் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது. சிறை வாசத்தில் இருந்த இறைவனுக்கே சுதந்திர காற்றை வழங்கியது தி.மு.க. அரசு தான். இது சமூக நீதியை பேணி காத்திடும் அரசு." என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசினார்.












Click it and Unblock the Notifications