Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்ணை முட்டிய கரகோஷம்.. இசைஞானி இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்.. வழங்கினார் பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சின்னாளபட்டி காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநா் ஆர்என் ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றனர்.

தங்கப்பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இன்று கவுரவ டாக்டர் பட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

 இளையராஜா

இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.

இளையராஜாவிற்கு பாராட்டு

இளையராஜாவிற்கு பாராட்டு

திருவாசகத்தை சிம்பொனி இசை மூலம் உலகறியச் செய்வதவர் என்றும் விக்ரம் படத்திற்கு புதிய வடிவத்தில் இசையை அளித்தவர் என்று காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பாராட்டு உரை வாசித்தனர். கடந்த ஜூலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்திக்காத நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

உமையாள்புரம் சிவராமன்

உமையாள்புரம் சிவராமன்

இளையராஜாவை அடுத்து மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். 1935ல் பிறந்த சிவராமன் இசை மீது தீராத பற்று கொண்டிருந்தார். இந்த பற்றுதான் அவரை 10 வயதில் அரங்கேற்றத்தை நோக்கி அழைத்து சென்றுள்ளது. இவருடைய தனிச்சிறப்பே, பாடகரின் குரலுக்கேற்ப சங்கீதத்தை வளைத்து கொடுக்கும் தன்மைதான். தமிழக அரசின் ஆஸ்தான வித்வானாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளார். மிக உயரிய விருதான பத்ம விபூசன் பட்டம் பெற்றுள்ளார். மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜிக்காக மிருதங்கத்தை வாசித்துள்ளார்.

5வது பிரதமர்

5வது பிரதமர்


காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜீவ்காந்தி என 4 பிரதமர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளது 5-வது பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+