எப்பதான் இந்த இடைவிடாத மர்மமான வான்சப்தங்களுக்கு பதில் கிடைக்குமோ? புலம்பும் திண்டுக்கல் மக்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் வான்பரப்பில் இடைவிடாத கேட்கும் வான்சப்தங்களுக்கு விடை தெரியாமல் நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். இன்று இரவும் இதேபோல் சப்தங்கள் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் வான்பரப்பில் விமானங்கள் பொதுவாக பறப்பது இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வானில் மிரட்டலான சப்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

Mysterious sounds Continuous create flutter in Dindigul

திண்டுக்கல் மாவட்டத்தையே அதிர வைக்கும் பயங்கர வெடிசப்தமும் ஒருமுறை கேட்டது. ஆனால் அதற்கும் பதில் கிடைக்கவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட திண்டுக்கல் வான்பரப்பில் விமானங்கள் பறப்பது போன்ற சப்தங்கள் இடைவிடாமல் கேட்டன.

இன்று இரவும் சுமார் 8 மணியளவில் இந்த விமான சப்தங்கள் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. வேடசந்தூர் ரெங்கமலைப் பகுதியில் கனிமவள ஆராய்ச்சி என்றாலும் கூட அதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு நடத்தலாமே என்பது திண்டுக்கல் மக்களின் ஆதங்கம்.

இரவு பகல் என எந்த நேரம் என்றில்லை.. விமானம் பறக்கும் சப்தம் திடீர் திடீர் என கேட்பதும் இதற்கு எந்த ஒரு பதிலுமே கிடைக்காமலும் இருப்பதும் பொதுமக்களை குழப்பத்தில் இருக்கிறது. இன்றும் சமூக வலைதளங்களில் திண்டுக்கல் மக்களின் ஹாட் டாபிக் இதுவாகத்தான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+