பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
திண்டுக்கல்: பாஜக துணை தலைவர், நயினார் நாகேந்திரன், மறுபடியும் அதிமுக கட்சிக்கு திரும்பி வந்தால் அதிமுகவில் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று, திண்டுக்கல் வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கு.க.செல்வம் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இது அந்த கட்சியின் உட்கட்சி பிரச்சனை. அதில் நான் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றார் முதல்வர்.
எஸ்வி சேகர் எந்த கட்சி? வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்தானே.. விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமி
நயினார் நாகேந்திரன்
பாஜகவிலுள்ள, நயினார் நாகேந்திரன் மறுபடி அதிமுக வந்தால், சேர்த்துக் கொள்வீர்களா இந்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்துதான் பாஜகவுக்கு சென்றார். அவர் மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்தால் அதிமுகவில் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ராமர் கோவில்
மேலும், ராமர் கோவில் பிரச்சினை இன்று, நேற்று உருவானது கிடையாது. நீண்ட காலமாக இருக்கக்கூடியது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டப்படுகிறது. அதை அதிமுக வரவேற்றுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
கூட்டணி
அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியில் உள்ளன. அப்படியிருக்கும்போது, அதிமுகவுக்கு பாஜக நிர்வாகியை வருக என முதல்வர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாஜக தலைவர்கள் என்ன மாதிரி பதில் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நயினார் நாகேந்திரன் ட்வீட்
வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன். ஆனால் என் கோபம் பாஜகவை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.