Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் கனவு.. மகளுக்காக பெற்றோர் பார்த்த வேலை! நேஷனல் லெவல் ஃப்ராடு கும்பலுடன் லிங்க்! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்து சேர முயன்ற மாணவி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ் காருண்யா ஸ்ரீவர்ஷினி மற்றும் தாயார் விஜய முருகேஸ்வரி மேற்குவங்கத்தை சேர்ந்த கும்பலுக்கு ரூ.25ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழை பெற்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலி சான்றிதழை உருவாக்கி கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதர். 55 வயதான இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி. பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நீட் தேர்வை எழுதிய காருண்யா ஸ்ரீவர்ஷினி 228 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை.

Dindigul crime neet

திண்டுக்கல் நீட் மோசடி

ஆனாலும், மருத்துவம் படிக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் காருண்யா ஸ்ரீவர்ஷினி. இதனால், பெற்றோர் மற்றும் நீட் முறைகேடு கும்பலுடன் இணைந்து 456 மதிப்பெண் பெற்றதாக நீட் போலி மதிப்பெண் சான்றிதழ், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கான போலியான சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்துள்ளார். தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுரியில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அட்மிசன் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி

தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீவர்ஷினி, நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துவப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

போலி மார்க் சீட்

இது குறித்து திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி பொறுப்பு முதல்வர் வீரமணி கொடுத்த புகார் படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், விசாரணை நடத்தி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 7ஆம் தேதி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு வங்க கும்பல்

காருண்யா ஸ்ரீ வர்ஷினியும், அவரது தாயான விஜய முருகேஸ்வரியும் எங்கிருந்து போலி சான்றிதழை பெற்றுள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் முருகேஸ்வரியும் காருண்யா வர்ஷினியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த கும்பல் மூலம் போலி சான்றிதழை பெற்றது தெரியவந்தது. புரோக்கர் ஒருவர் மூலம் மேற்கு வங்கத்தை சேர்ந்த போலி சான்றிதழ் கும்பலை தொடர்பு கொண்டு அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து இந்த போலிச் சான்றிதழை பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர் போலீசார். தொடர்ந்து போலிச் சான்றிதழை உருவாக்கிக் கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதே போல வேறு யாரேனும் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்களா என்ற விசாரணையும் தனியே நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+