பழனி முருகன் கோவில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம்.. நாளை பிரதான சன்னதி குடமுழுக்கு!

பழனியில் படிப்பாதை, இடும்பன், கடம்பன் சன்னதிகளில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : பழனி மலைக்கோவிலின் சுற்றுப்புற கோவில்கள் மற்றும் அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பழனி மலை அடிவார சன்னதிகள், கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில் உள்ளிட்ட உப கோவில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.

படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி கோபுரங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி குடமுழுக்கு

பழனி குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 27ஆம் தேதி) நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் பிரதானமாக விளங்கும் மலைக்கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து பழனி கோவில் மூலவரான நவபாஷாண முருகனுக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி மாலை முதல்கால யாக பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக யாக வேள்வி நிகழ்ச்சியில், நேற்று வரை நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.

இன்று குடமுழுக்கு

இன்று குடமுழுக்கு

நாளை அதிகாலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பழனியில் இன்று பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை சன்னதிகள், விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் சன்னதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம்

இதையடுத்து நாளை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்க விமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை (27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+