எப்படி வந்தது? யார் போட்டது?.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த "அந்த" பொருள்
பழனி: பழனியில் ஒரு தெருவில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் முன் எலும்பு கூடுகள் இருந்த காரணத்தால் மக்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் பகுதிதான் தேவாங்கர் தெரு. பழனி முருகன் கோவிலில் இருந்து இந்த தெரு சில கிலோ மீட்டர்கள் தூரம் இருக்கிறது.
இந்த பகுதியில் நூறுக்கும் அதிகமான வீடுகள் இருக்கிறது. அடுத்தடுத்து நெருக்கமாக இங்கு நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

கோவில் எப்படி
பழனி கோவில் அடிவாரத்தில் கடை வைத்து இருக்கும் சிலரும் இங்கு வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பழனியில் திகில் ஊட்டக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேவாங்கர் தெருவில் நேற்று காலை ஒருவர் வீட்டின் முன் மனித உடலின் மண்டை ஓடு இருந்துள்ளது. மை பூசப்பட்ட நிலையில் மண்டை ஓடு இருந்துள்ளது. இதை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.

விசாரணை செய்தார்
இது தொடர்பாக பக்கத்து வீடுகளில் விசாரிக்கலாம் என்று சென்ற போது பக்கத்து வீடுகளிலும் இதே பொருட்கள் கிடந்துள்ளது. ஆம் அருகருகே பல்வேறு வீடுகளில் எலும்பு கூடுகள் கிடந்துள்ளது . சிலர் வீட்டில் மண்டை ஓடுகளும் , சிலர் வீட்டில் கால் எலும்புகளும் கிடந்து இருக்கிறது.

மக்கள் அதிர்ச்சி
மக்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பலரின் வீட்டு வாசலில் அமங்கலமாக இப்படி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து எல்லோரும் சேர்ந்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்துள்ளனர். இதை பார்க்க பக்கத்து தெரு மக்களும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம நபர்கள்
மர்ம நபர்கள், விஷமிகள் யாராவது இப்படி செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மந்திரம், தந்திரம் தெரிந்த நபர்கள் இப்படி செய்து இருக்கலாம் . மக்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications