பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ரோப் கார் சேவை இயங்காது.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு! என்ன காரணம்?
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 19) முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதையை பயன்படுத்தலாம்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலையில் இருக்கும் தண்டாயுதமாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப் பாதை ஆகியவை பிரதான வழியாக உள்ளது.
அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். அதில் பக்தர்கள் பயணித்து மலைக் கோவிலுக்குச் செல்லலாம். ரோப் கார் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும் மாதத்தில் ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும்.
பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது ரோப் கார் சேவை. ரோப் காரில் பயணிப்பதற்கு டிக்கெட் வாங்கும் இடத்தில் எப்போதும் நல்ல கூட்டம் இருக்கும். இந்நிலையில் 1 மாத காலத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கம்பிவட ஊர்தி சேவை (ரோப் கார்) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 19.08.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது.
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில், படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications