திண்டுக்கல் மனமகிழ்மன்றத்தில் மாதம் 10 ஆயிரம்.. சப் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி.. பெரிய ட்விஸ்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர் பழநி பைபாஸ் ரோட்டில் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறார். இவரிடம் மனமகிழ் மன்றப் பிரச்சினை இல்லாமல் தொடர்ந்து நடத்த திண்டுக்கல் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது தடையங்களை அழிக்க நடந்த முயற்சியை தடுத்த டிஎஸ்பி காயம் அடைந்துள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த 52 வயதாகும் சுகுமார் என்பவர் திண்டுக்கல் பைபாஸ் சாலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நகர தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் , சுகுமார் நடத்தும் மனமகிழ் மன்றத்துக்குச் சென்றுள்ளாராம்

அப்போது உங்களுடைய மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாகப் புகார் வந்துள்ளது என்று சுகுமார் கூறினாராம். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் என்று மிரட்டினாராம். இதைக் கேட்ட சுகுமார், அவ்வளவு தொகையைத் தன்னால் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். பின்னர் ரூ.7 ஆயிரம் கொடுக்கும்படி கலையரசன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
இந்த நிலையில் மாதம் மாதம் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகுமார், அதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய டிஎஸ்பி நாகராஜன் புகாரில் உண்மை தன்மையை உறுதி செய்ய முடிவு செய்தார்.., கலையரசனை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தார். அதற்காக ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து, சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி கூறினார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட சுகுமார், நேற்று இரவு 7 மணி அளவில் கலையரசனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தால் பணத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து கலையரசனும் அவர் கூறிய இடத்துக்கு சாதாரண உடையில் வந்தார். அவர் வருவதற்கு முன்பே லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா மற்றும் போலீசார் அங்கு மறைந்திருந்தனர்.
தொடர்ந்து சுகுமார், கலையரசனிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். அவர் அதை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கலையரசனை கையும், களவுமாகப் பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து கலையரசன் தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணைக்காக தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு ரசாயன கரைசலுடன் இருந்த கண்ணாடி பாட்டிலில் கலையரசனின் கைவிரல்களை நனைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது தனது கைகளில் இருக்கும் தடயத்தை அழிக்க நினைத்த கலையரசன், கண்ணாடி பாட்டிலை வலது கையால் தாக்கி உடைத்தாராம். அப்போது அவருடைய கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அருகில் இருந்த மற்றொரு கண்ணாடி பாட்டிலையும் கலையரசன் உடைத்தாராம், உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து இடது கையில் தேய்க்க முயன்றார். இதைக் கவனித்த போலீஸ் டிஎஸ்பி நாகராஜ் அவரைத் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இடது கையில் கண்ணாடித் துண்டுகள் கீறியதில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் உள்ள மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் இருவருக்கும் சிகிச்சை கொடுத்தனர். இதையடுத்து கலையரசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாடி பாட்டிலை உடைத்து தனது கைகளில் கீறி தடயத்தை அழிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை














Click it and Unblock the Notifications