200+ சீட்டு.. தமிழகத்தில் தளபதியின் 'விசில் புரட்சி'.! ஓவர் கான்ஃபிடன்சில் பேசிய தவெக செங்கோட்டையன்!
திண்டுக்கல்: தமிழகம் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் 'விசில் புரட்சி' நடைபெறப் போகிறது. வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும் என முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியுமான செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பரபரப்புகளும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில், 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், விவிபாட் இயந்திரக்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வரும் அரசியல் கட்சியினர் தற்போது தங்கள் பார்வையை கடவுள்கள் பக்கம் திருப்பியுள்ளனர். நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பழனி முருகன் கோவிலிலும் ஏராளமான அரசியல்வாதிகள் குவிந்து வருகின்றனர். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மனைவி ,மகன் , முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் , பொள்ளாச்சி ஜெயராமன் , ஆர்.பி உதயகுமார் ஆகியோர் பழனி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியுமான செங்கோட்டையன் பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தை முன்னிறுத்தி அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், *தமிழகம் ஏற்கனவே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் 'விசில் புரட்சி' நடைபெறப் போகிறது.
வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும். தவெக வாக்குகளை பிரித்தாலும், ஆட்சி அமைக்க முடியாது என்ற எதிர்கட்சிகள் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு," யார் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; அது வெறும் 'அல்வா' பேச்சுகளாகவே முடியும் என்றார்.














Click it and Unblock the Notifications