திண்டுக்கல் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. என்ன நடந்தது! மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பரபர
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தீ விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் திருச்சி சாலையில் பிரபல எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து: அங்கிருந்த கணினியில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக இதுபோல தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க தானியங்கி தீ அணைப்பான்கள் இருக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் தீ அணைப்பான்கள் செயல்படவில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி இருக்கிறது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், இந்த பயங்கர தீ விபத்தில் லிப்ட்டில் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லிப்ட்டில் சிலர் சிக்கியுள்ளது குறித்த தகவல்கள் தீயணைப்பு படையினருக்குக் கடைசியாகவே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு லிப்ட்டில் வேறு சிலர் சிக்கியிருந்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி: இதற்கிடையே இது தொடர்பாகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த மருத்துவமனையில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் தீயணைப்புத் துறையினர், போலீசார், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு உள்ளே யாராவது உள்ளனரா என்று தீயணைப்புத் துறையினர் பார்த்தனர்.
உயிரிழப்பு: அப்போது தான் லிஃப்டில் சிலர் சிக்கியிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்தனர். அவர்களைப் பரிசோதிக்க அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அதில் சிலர் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. மருத்துவர்கள் சொன்ன பிறகே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது சரியாகத் தெரிய வரும். இப்போது தான் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அனைத்தும் முடிந்த பிறகே என்ன நடந்தது.. எவ்வளவு பேர் உயிரிழப்பு என்பது தெரிய வரும்" என்றார்
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications