திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"காட்டேஜ்" இளைஞர் மீது.. 50 வயது பெண்ணுக்கு வந்த ஆசை.. ஒரே அட்டகாசம்.. கொடைக்கானல் கொடுமை

இளைஞரை தாக்கிய 4 பேருக்கு கொடைக்கானல் போலீசார் வலை விரித்துள்ளனர்

Google Oneindia Tamil News

கொடைக்கானல்: 32 வயது இளைஞர் ஒருவருடன் 50 வயது பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.. விளைவு கொலைவெறி தாக்குதலில் வந்து முடிந்துள்ளது...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால்.. இங்கு தன்ராஜ் என்பவர் 5 வருடமாக தங்கி உள்ளார்.. இவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர்.. 32 வயதாகிறது..

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

கொடைக்கானலிலேயே சொந்தமாக ஒரு நிலம் வாங்கி, காட்டேஜ் நடத்தி வருகிறார்.. இதே கிராமத்தை சேர்ந்தவர் பாலம்மாள் என்பவர் இந்த காட்டேஜில் வேலை பார்த்து வந்துள்ளார்.

 விதவை பெண்

விதவை பெண்

பாலம்மாளுக்கு 50 வயதாகிறது.. கணவனை இறந்தவர்.. ஒரே ஒருமகள் இருக்கிறார்.. அவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.. அவர் மாமியார் வீட்டில் உள்ளார்.. அதனால் பாலம்மாள் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்.. அப்போதுதான் காட்டேஜ் ஓனர் தன்ராஜுக்கும் பாலம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் ஒரேவீட்டில் 3 வருடமாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது..

அறிவுரை

அறிவுரை

ஆனால், பாலம்மாளின் இந்த நடவடிக்கை அந்த ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே, பாலம்மாளிடம் பலமுறை அறிவுரை சொன்னார்கள்.. இளைஞனுக்கும் அடிக்கடி அறிவுரை சொல்லி உள்ளனர்.. சில முறை இந்த விவகாரத்தில் தகராறுகளும் நடந்துள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில், கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் ஊர் திருவிழா நடந்துள்ளது.. அப்போது தன்ராஜ் அங்கே வந்துள்ளார்.. அந்த நேரம் பாலம்மாளின் தம்பி பூவேந்திரன், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 நபர்கள் குடிபோதையில் தன்ராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்..

 கொடூர தாக்குதல்

கொடூர தாக்குதல்

ஒருகட்டத்தில் போதை அதிகமாகி, தன்ராஜின் கை, கால்களை கயிற்றால் கட்டியும், கல்லால் தலை, உடல் பகுதிகளை கொடூரமாக தாக்கியும் உள்ளனர்... இதை பார்த்த பாலம்மாளும், அங்கிருந்த பொதுமக்களும், பதறியடித்து கொண்டு வந்து, தன்ராஜை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.. அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்... தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இளைஞன் இன்னும் சீரியஸ் கண்டிஷனில் இருக்கிறாராம்.

 தலைமறைவு

தலைமறைவு

இதனிடையே, தன்ராஜை 4 பேர் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோவானது சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்துவிட்டது.. இந்த வீடியோவானது கொடைக்கானல் போலீசாரின் கவனத்துக்கும் எட்டியதையடுத்து, பூவேந்திரன், வரதராஜன், கார்த்திக், சின்ன தம்பி, உள்ளிட்ட 4 நபர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால், 4 பேரையும் காணவில்லை.. அவர்களை கொடைக்கானல் போலீசார் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

English summary
what happened in Kodaikkanal and four people attacked youth for illegal relationship இளைஞரை தாக்கிய 4 பேருக்கு கொடைக்கானல் போலீசார் வலை விரித்துள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X