22 வயதுதான்.. சிக்கன் சாப்பிட்ட இளைஞர்.. மூச்சுத்திணறி திடீர் பலி.. திண்டுக்கல்லில் பரிதாபம்
திண்டுக்கல்: வீட்டில் சமைத்த சிக்கனை சாப்பிட்ட 22 வயது இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே, இளம் வயதினர் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, உணவு சாப்பிட்டதும் உயிரிழக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
பிரியாணி சாப்பிட்ட இளைஞர் மரணம்; புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு போன்ற செய்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் திண்டுக்கல்லில் நடைபெற்றிருக்கிறது.

கூலித்தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22). கூலி வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது வீட்டில் சிக்கன், மீன் உணவுகளை சமைத்துள்ளனர். இந்நிலையில், காலை வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த வசந்தகுமார் கடும் பசியில் மதியம் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, சிக்கன் உணவை சாப்பிட்டிருக்கிறார் வசந்திகுமார்.

சிக்கன், பொறித்த மீன்கள்
பசி அதிகமாக இருந்ததால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே அவர் சிக்கன் சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் படுத்து உறங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாலை எழுந்த அவர், வீட்டில் இருந்த பொறித்த மீன்களை சாப்பிட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் போயுள்ளது.

ஜீரணமாக குளிர்பானம்
இதுகுறித்து தனது தந்தையிடம் கூறிய வசந்தகுமார், ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்திருக்கிறார். பிறகு, சிறிது நடந்து சென்றுவிட்டு வருவதாக கூறி வசந்தகுமார் சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை வசந்தகுமாருக்கு போன் போட்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் அவரை தேடிச்சென்ற போது ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார்.

பரிதாபம்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிக்கன் சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications