22 வயதுதான்.. சிக்கன் சாப்பிட்ட இளைஞர்.. மூச்சுத்திணறி திடீர் பலி.. திண்டுக்கல்லில் பரிதாபம்
திண்டுக்கல்: வீட்டில் சமைத்த சிக்கனை சாப்பிட்ட 22 வயது இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே, இளம் வயதினர் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, உணவு சாப்பிட்டதும் உயிரிழக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
பிரியாணி சாப்பிட்ட இளைஞர் மரணம்; புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு போன்ற செய்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் திண்டுக்கல்லில் நடைபெற்றிருக்கிறது.

கூலித்தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22). கூலி வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது வீட்டில் சிக்கன், மீன் உணவுகளை சமைத்துள்ளனர். இந்நிலையில், காலை வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த வசந்தகுமார் கடும் பசியில் மதியம் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, சிக்கன் உணவை சாப்பிட்டிருக்கிறார் வசந்திகுமார்.

சிக்கன், பொறித்த மீன்கள்
பசி அதிகமாக இருந்ததால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே அவர் சிக்கன் சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் படுத்து உறங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாலை எழுந்த அவர், வீட்டில் இருந்த பொறித்த மீன்களை சாப்பிட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் போயுள்ளது.

ஜீரணமாக குளிர்பானம்
இதுகுறித்து தனது தந்தையிடம் கூறிய வசந்தகுமார், ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்திருக்கிறார். பிறகு, சிறிது நடந்து சென்றுவிட்டு வருவதாக கூறி வசந்தகுமார் சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை வசந்தகுமாருக்கு போன் போட்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் அவரை தேடிச்சென்ற போது ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார்.

பரிதாபம்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிக்கன் சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications