நாகாலாந்து: "நாய் கறி”க்காக 3 ஆண்டுகள் சட்டரீதியான உரிமைப் போர் நடத்திய வரலாறு தெரியுமா உங்களுக்கு?
சென்னை: நாகாலாந்து நாய்கறி விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு அரசியலில் சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
”நாய்கறி சாப்பிடும் நாகாலாந்துகாரர்களே சொரணையோடு அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டியடித்தார்கள்” என்று மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியதுதான் பெரும் சர்ச்சை.
இதற்கு பதில் தந்துள்ள ஆளுநர் மாளிகை, நாகாலாந்து மக்களை நாய்கறி தின்பவர்கள் என இழிவுபடுத்திவிட்டார் ஆர்.எஸ்.பாரதி என கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆனால் தாம் இழிவுபடுத்தவில்லை.. அவர்களது உணவு பழக்கத்தைதான் சுட்டிக்காட்டினேன் என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

நாகாலாந்து மக்களின் வாழ்வியலில் இன்றியமையாத ஒன்று நாய் கறி என்பது உண்மைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்டு கறிதான் காஸ்ட்லி. சொந்த பந்தங்கள் ஒன்று கூடினால் ஆடு வெட்டி விருந்து வைப்பது வழக்கம். அதுபோலதான் நாகாலாந்தில் உறவினர்களுக்கு நாய் கறி விருந்து வைப்பது அவர்களது பண்பாடு.
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் நடப்பது, பறப்பது, ஊர்வது என அத்தனை பிராணிகளும் சாப்பிட உயிருடன், கருவாடாக கிடைக்கும். நாய் தலைகளை சுட்டு வைத்திருப்பதையும் நாய் கறிகளை சுட்டு தொங்க விட்டிருப்பதையும் பொதுவெளியில் இயல்பாகவே பார்க்க முடியும்.
நாகாலாந்து மாநிலத்தில் எந்த அசைவ ஹோட்டலுக்கு போனாலும் விதம் விதமான நாய்கறி வெரைட்டிகள் கிடைக்கும். நமக்குதான் ஒவ்வாமை. ஆனால் நம்மூர் சிக்கன் வெரைட்டிகள் போல வகை வகையான நாய்கறி டிஷ்கள் வறுத்தது, குழம்பு என அத்தனையும் கிடைக்கும்.
ஆனால் நாம் ஆடுகளை வெட்டுவதைப் போல பக்குவமாக பதூசாக நாய்களை நாகாலாந்து மக்கள் வெட்டி “கூறு போடுவது” இல்லை என்பதுதான் பிரச்சனையாக வெடித்தது. நாகாலாந்து மக்கள் நாய்களை மிக மிக கர்ண கொடூரமான முறையில்தான் அடித்தே கொன்று கறியாக்குவதுதான் அடிப்படை பிரச்சனை. நாய்களை ஒரு சாக்கில் கட்டி அதன் வாயை நன்றாக கட்டிவிட்டு உருட்டு கட்டைகளால் அடி அடியென கதற கதற அடித்து சாகடித்துவிட்டு பின்னர் தீயில் வாட்டி கறிகளை வெட்டி எடுப்பதுதான் நாகாலாந்து பாணி.
இதற்கு எதிராகத்தான் மேனகா காந்தி உள்ளிட்டோர் வலிமையாக குரல் கொடுத்தனர். நீதிமன்ற படிகளேறினர். இதனால் நாகாலாந்தில் 2020-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் நாய்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னரே அண்மையில் நாகாலாந்தில் நாய்கறி விற்பனை மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. இப்போது நாகாலாந்து நாய்கறி விற்பனை கன ஜோராக நடைபெறுகிறது. ஆக நாகாலாந்து நாய்கறி உரிமைப் போராட்டம் என்பது அந்த மக்களின் சரித்திரத்தில் இடம் பெற்ற ஒன்று.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications