அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர் நூல் வெளியீட்டு விழா
துபாய்: கம்பன் மீரான் எழுதிய அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர் என்கிற நூல் வெளியீட்டு விழா இணைய வழியாக நடத்தப்பட்டது. இந்த நூலை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில். கம்பம் மீரான் எழுதிய 'அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்' என்ற நூல் எழுதியுள்ளார். இதன் இணையவழி அறிமுக நிகழ்ச்சி ஜூம் தளத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதற்கு காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் (அமீரகம்) ஒருங்கிணைப்பாளர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரும், தீயணைப்புத் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநருமான ஜனாப். மு. ஷாகுல் ஹமீது, சுதந்திர போராட்ட வீரர் கக்கன் பேத்தியும், தீயணைப்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குநருமான மீனாட்சி விஜயகுமார், பரமக்குடியைச் சேர்ந்த கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா ( கவிஞர் இதயா), மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர், முனைவர் சே.முனியசாமி, பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நூலாசிரியரான கம்பம் மீரான் ஏற்புரையாற்றினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தொகுப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி அமீரக நேரப்படி காலை 10-11.30 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்












Click it and Unblock the Notifications