Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈகோ பிரச்சனை.. இவரை முதல்ல தூக்குங்க.. மூத்த வீரருக்கு எதிராக "பிரஷர்".. தமிழருக்கு அடிக்கும் லக்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்திய வீரர் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நேற்று டாஸ் வென்று பாகிஸ்தான் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஒரு பால் மீதம் இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

 இந்திய அணி

இந்திய அணி

நேற்று இந்திய அணியின் தோல்விக்கு அணியின் மோசமான பவுலிங் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 181 ரன்கள் அடித்தும் இந்திய அணியால் அதை டிபன்ட் செய்ய முடியவில்லை. அதோடு இந்திய அணி நேற்று 6வது பவுலரை பயன்படுத்தவில்லை. இதுவும் அணிக்கு சிக்கலாக மாறியது. நேற்று ரோஹித் நினைத்து இருந்தால் மிடில் ஓவர்களில் தீபக் ஹுடாவை பவுலிங் செய்ய வைத்து இருக்கலாம். ஆனால் ரோஹித் அவருக்கும் ஓவர் தரவில்லை. இது மொத்தமாக இந்திய அணிக்கே சிக்கலாக மாறியது.

 மூன்று போட்டி

மூன்று போட்டி


அதேபோல் இந்த தொடரில் கடந்த மூன்று போட்டியிலும் சஹால் சரியாக பவுலிங் செய்யவில்லை. முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக பவுலிங் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக சாஹல் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதேபோல் ஹாங்காங் குட்டி அணி. ஆனால் அந்த அணிக்கு எதிராகவும் இவர் விக்கெட் எடுக்கவில்லை. இவரின் பவுலிங் அவ்வளவு பிரஷர் தரும் விதமாக இல்லை.

பவுலிங்

பவுலிங்

இன்னும் சொல்லப்போனால் இவரின் பவுலிங்கில் மிக எளிதாக எதிரணி வீரர்கள் ஆடுகிறார்கள். ஹாங்காங்கிற்கு எதிராக சாஹல் கொஞ்சம் ரன்னை கட்டுப்படுத்தினார். ஆனால் நேற்றெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட் எடுத்து 43 ரன்கள் கொடுத்தார். அந்த அளவிற்கு மோசமாக இவரின் பவுலிங் இருந்தது. இவர் சுத்தமாக நேற்று பாகிஸ்தான் வீரர்களுக்கு பிரஷர் கொடுக்கவே இல்லை.

 சாஹல்

சாஹல்

இந்த நிலையில்தான் சாஹலை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அணியில் அஸ்வின் இருக்கிறார். அவர் நன்றாக ஆடுவார். அவரை அணியில் சேர்க்க வேண்டும். அதோடு பேட்டிங்கும் செய்வார். மூத்த வீரர் என்பதால் பிரஷரில் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்வார்.

 அஸ்வின்

அஸ்வின்

இதனால் அஸ்வினை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. முதலில் சாஹலை அணியில் இருந்து தூக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிக அளவில் வைக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் அஸ்வின் மூத்த வீரர் என்பதால் ரோஹித் இவரை ஈகோ காரணமாக எடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமயங்களில் அஸ்வின் மூத்த வீரர் என்பதால் சிலரின் பேச்சை கேட்க யோசிப்பார். அதனால் அஸ்வினை அணியில் ரோஹித் எடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+