துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்? ஈரானுக்கும் - அமீரகத்துக்கும் என்ன தான் பிரச்சனை! முழு விவரம்
துபாய்: அமெரிக்கா, இஸ்ரேல் போருக்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தான் குறிவைத்து அடித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியை தான் குறிவைத்து தாக்குகிறது. சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளை விட துபாய் மீது தான் ஈரான் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கிறது. அமெரிக்காவின் ராணுவ தளம், விமானப்படை தளம், கடற்படை தளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மீது தான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிற நாடுகளை ஒப்பிடும்போது தினந்தோறும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களை குறிவைத்து ஈரான் அடிக்கிறது. துபாய் விமான நிலையம், பிற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் அல் அரப்க்கு அருகே உள்ள முக்கிய கட்டங்கள் சேதமடைந்துள்ளன. துறைமுகங்களில் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் 6 பேர் வரை பலியாகி உள்ளனர். ஒரு இந்தியர் காயமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இருநகரங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் சார்பில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன்கள் இந்த நகரங்களை தாக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிற அரபு நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகமே அதிக தாக்குதலை சந்தித்துள்ளது. மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், '' ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் 298 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,606 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளது'' என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா அல்லது குவைத் போன்ற அண்டை நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமாகும்.
இப்படியான சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தை குறிவைத்து ஈரான் தாக்குவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகமும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இங்கு அமெரிக்காவின் அல் தாஃப்ரா விமானப்படை தளம் உள்ளது. இதுதான் ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் குறிவைக்க முதல் காரணமாகும்.
அமெரிக்காவும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கெள்ளவில்லை. இதனால் அமெரிக்காவை பழிவாங்க ஈரான், தனது அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்களை தாக்கி அழிக்கிறது. ஆனால் பிற அரபு நாடுகளிலும் அமெரிக்காவின் தளங்கள் உள்ளது. அப்படி இருக்கும்போது துபாய், அபுதாபியை ஈரான் டார்க்கெட் செய்வதற்கு பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது.
அதாவது ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் விமானப்படை தளம் சார்ந்த விவகாரம் மட்டும் இல்லை. இருநாடுகள் இடையேயும் ராணுவ ஒப்பந்தம் உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை இருநாடுகளும் மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இது ஈரானுக்கு பிரச்சனையாக உள்ளது.
எப்போது, வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு எதிராக திரும்பலாம். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்குவதன் மூலம் அங்கு பாதிப்பு ஏற்படும். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவுக்கு போரை நிறுத்த பிரஷர் தரும். இதனால் தங்களுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா குறைக்கும் என்று ஈரான் நம்புகிறது.
அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே பலாமாக உள்ளது. நிதி, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமாக ஐக்கிய அரபு அமீரகம் தான் இருக்கிறது. ஆனால் ஈரான், தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது.
இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தை அடித்தால் வரும்காலத்தில் அந்த நாடு தனது நிலைப்பாட்டை மாற்றலாம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் தொடர்பை குறைக்கலாம். இது பிற அரபு நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று ஈரான் நம்புகிறது.
அதேபோல்,கடந்த 2020ம் ஆண்டு ஆபிரகாம் ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுடன், ஐக்கிய அரபு அமீரகம் உறவுகளை வலுப்படுத்தியது. இது ஈரானுக்கு பிரச்சனையாக மாற்றி உள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரானுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி அமெரிக்கா - இஸ்ரேலுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதால் ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கி வருகிறது.
இதனால் தான் ஐக்கிய அரபு அமீரகத்தை சிதைக்க ஈரான் முடிவு செய்துள்ளது. மேலும் துபாய், அபுதாபி நகரங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நகராக உள்ளது. தற்போதைய தாக்குதல் நடவடிக்கையால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை குறைக்கலாம்.
இதனால் அந்த நாட்டின் வருமானம் பாதிக்கப்படும். அதேபோல், ராணுவ திறன்களில் ஐக்கிய அரபு அமீரகம் பலவீனமாக உள்ளது. சவுதியை விட பலவீனமாக உள்ளது. இதனால் தான் ஈரானால் எளிதாக ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்க முடிகிறது. இதுனை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தை முடிந்தவரை சேதப்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
-
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன? -
விட மாட்டோம்..தேடிப் போய் ’சம்பவம்’ செய்வோம்! குழந்தைகளை கொ*ற குற்றவாளி! ஈரான் ராணுவம் எடுத்த சபதம்! -
பொழைக்கப் போன இடத்துல கைய கால வச்சுட்டு சும்மா இருக்கனும்! 17 இந்தியர்களை கொத்தாக தூக்கிய அமீரகம்! -
ஈரானின் ஈரலே ’கார்க்’ தான்.. அங்க கைய வச்சா உலகமே ஆட்டம் கண்டுடும்! அமெரிக்கா டார்கெட் செய்வது ஏன்? -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு












Click it and Unblock the Notifications