Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குப்பையில் கிடந்த தங்கம்.. விற்க சென்றவரை பிடித்த போலீசார்.. அடுத்து நடந்ததுதான் நம்பவே முடியாத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற இந்திய பெண் காமினி கண்ணன் என்பவர் தவறுதலாக, தங்கை நகை வைத்து இருந்த பையை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். இனி அவ்வளவுதான் நகை கிடைக்காது என வேதனையில் ஆழந்தார் காமினி.. ஆனால் அவரது கற்பனை செய்து கூட பார்க்காத சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

ஐக்கிய அரபு அமீரகத்த்தில் உள்ள துபாயில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை வசித்தவர் காமினி கண்ணன். அதன்பிறகு தாய்நாடான இந்தியா திரும்பிய காமினி சமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமண்ம் ஒன்றிற்காக அங்கு சென்றுள்ளார்.

Gold Mistakenly Thrown Away in Dubai Indian Woman Faces Shocking Twist

தெரியாமல் குப்பையில் வீசிய காமினி

தங்கம் விலை இப்படி தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறதே.. மலிவாக இருக்கும் போது வாங்கி குவித்து இருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கும் என பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு வந்தார் காமினி. அப்போது தான் தங்க காயின் வைத்து இருந்த பை கிழிந்து இருந்ததை கவனித்துள்ளார்.

உடனே, அதில் இருந்த அனைத்து தங்கத்தையும், புதிதாக ஒரு சிறிய பையில் போட்டுவிட்டு, டைனிங் டேபிளில் வைத்துள்ளார். அதில், 22 காரட் தங்க காயின் 8 கிராமும், 50 கிராம் தங்க கட்டியும் இருந்துள்ளது. அதேநாள் மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்த காமினியின் மகன் தங்கம் இருந்த பையை தவறுதலாக குப்பை பை என நினைத்து குப்பையில் வீசிவிட்டார்.

12.35 லட்சம் மதிப்புள்ள தங்கம்

பிப்ரவரி 2 ஆம் தேதி காமினி தாய்நாடு திரும்ப இருந்த நிலையில், 1 ஆம் தேதிதான் தங்கம் மிஸ் ஆனது தெரிந்தது. குப்பையில் தனது மகன் தவறுதலாக வீசியது தெரியவந்ததால், இனி எங்கே கிடைக்க போகிறது என்று நம்பிக்கை இழந்துள்ளார். இருந்தாலும் சொல்லி வைப்போமே என்று பில்டிங் காவலாளியிடம் 12.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் எப்படி மிஸ் ஆனது என்று சொல்லிவைத்துள்ளார்.

தங்கள் மீதுதான் தவறு.. எப்படியும் கிடைக்காது என்று கருதிய காமினி குடும்பத்தினர் போலீசிடமும் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் மூன்று நாட்கள் கழித்து பிப்ரவரி 4 ஆம் தேதி காமினியின் மகன் அபிமன்யூவிற்கு கட்டிடத்தின் பாதுகாவலரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது, காணாமல் போன தங்கள் உடைமைகளைப் பற்றி யாரோ விசாரிப்பதாக அந்தக் காவலாளி கூறியுள்ளார்.

தேடி வந்த போலீசார்

விசாரித்தவர்கள் காவல்துறையினர் என்பது பின்னர் தெரியவந்ததாகவும் அபிமன்யு கூறினார். உடனே அந்த போலீஸ் அதிகாரியை சந்திக்க அபிமன்யூ சென்றுள்ளார். அப்போது, போலீசார் கூறிய தகவல் அவருக்கு வியப்பை அளித்துள்ளது. அதாவது, குப்பை சேகரிக்கும் ஒருவர் தங்கத்தை கண்டுபிடித்து அதை தங்க கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு போலீசார் அந்த ஊழியரை விசாரித்தபோது, குப்பையில் அந்த தங்கத்தை கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த தங்கத்தை தவற விட்டது யாராக இருக்கும் என்று விசாரித்து, நேராக அபிமன்யூ கட்டிடத்திற்கே போலீசார் வந்துவிட்டார்களாம்.

நவீன முறையில் டிராக் செய்யப்படுகிறதாம்

துபாயில் கழிவு மேலாண்மை கூட எந்த நளவு நவீன முறையில் டிராக் செய்யப்படுகிறது என்பது ஒவ்வொரு பையும் எந்த வீட்டில் இருந்து வீசுகிறார்கள் என்பது முதல் கொண்டு கண்காணிக்கப்படுவது போல் தெரிவதாக அபிமன்யூ கூறினார். மறுநாள் அவரை அபிமன்யூவை தங்கம் வாங்கியதற்கான ஆவணங்களுடன் காவல் நிலையம் வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பிறகு மொத்த பிரச்சனையும் சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+