இந்தியாவின் மாஸ்டர் மூவ்.! ஒரு பக்கம் அமீரகம் உடன் டீல்.. இன்னொரு பக்கம் சவுதி உடன் மீட்டிங்!
துபாய்: சமீபத்தில் தான் அமீரக அதிபர் இந்தியாவுக்கு வந்து சென்ற நிலையில், பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து முக்கிய கடிதம் கையெழுத்தாகி இருந்தது. அந்தக் கடிதம் கையெழுத்தான உடனேயே இந்தியா நேராக சவுதியிடம் சென்றுள்ளது. சவுதி - அமீரகம் இடையே மோதல் உள்ள சூழலில், இந்தியாவின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் உடனான உறவு நமக்கு ரொம்பவே முக்கியம். இதன் காரணமாகவே அங்குள்ள எல்லாத் தரப்பு நாடுகளுடனும் இந்தியா முடிந்தவரை இணைந்து செயல்படும். நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுக்கும்.

அமீரகம்
கடந்த வாரம் தான் அமீரக அதிபர் இந்தியாவுக்கு வந்து சென்றிருந்தார். அவர் வெறும் 3 மணி நேரம் மட்டுமே இந்தியாவுக்கு வந்தாலும் அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாகப் பாதுகாப்பு சார்ந்து முக்கியமான கடிதமும் கையெழுத்தானது. இதற்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே சவுதி உடனும் இந்தியா ஆலோசனை நடத்தியுள்ளது.
சவுதி
நேற்றைய தினம் சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய மற்றும் சவுதி மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினார். இரு தரப்பிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், உலகளவிலும் தங்கள் பிராந்தியங்களிலும் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விவாதித்தனர்.
இது மூன்றாவது இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு மீட்டிங் ஆகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைச் செயலாளர் வினோத் பஹாடேவும், சவுதி உள்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இயக்குநர் ஜெனரல் அகமது அல்-ஈசாவும் இணைந்து இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
முக்கியமான மீட்டிங்
தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதைத் தடுத்தல், பயங்கரவாத நோக்கங்களுக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்தல், குற்றங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையேயான தொடர்பு, பயங்கரவாத எதிர்ப்புகளில் உள்ள சவால்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கமான மீட்டிங் என்றாலும் கூட இந்தியா அமீரகம் இடையேயான பாதுகாப்பு கூட்டாண்மைக்கான உறுதிமொழி கடிதம் கையெழுத்திடப்பட்ட சில நாட்களில் இந்தச் சந்திப்பு நடந்ததால் அது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஏமன் விவகாரத்தால் சவுதிக்கும் அமீரகத்திற்கும் இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்
இரு நாடுகளும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை என்றாலும் ஏமன் மற்றும் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்காவின் லிபியா, சூடான் போன்ற பிற பகுதிகளில் நிலவும் சூழல்களில் நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இதில் இரு தரப்பும் சில காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. இதனால் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் மத்தியக் கிழக்கில் இரு நாடுகள் உடனான உறவும் இந்தியாவுக்கு முக்கியம். சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முதலீடுகளுக்கு மிக முக்கியமானவை. மேலும், அங்கு ஏராளமான இந்தியர்களும் பணியாற்றுவதால், இரண்டுமே இந்தியாவுக்கு முக்கியமானது. அமீரகம் உடனான ஒப்பந்தத்தால் இந்தியா- சவுதி உறவில் சிக்கல் வராது என்பதைக் காட்டவே இந்தியா உடனடியாக இந்த சந்திப்பை நடத்தியிருக்கிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications