தலைக்கு மேல் குவிந்த கடன்.. மன வேதனையில் இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டு தற்கொலை
துபாய்: சமுதாய சேவையில் அதிக நாட்டம் கொண்டு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் பாராட்டப்பட்ட இந்தியத் தொழிலாளர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தீப் வெள்ளலூர் என்ற 35 வயது கொண்ட அந்த இந்தியர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குட்பட்ட ராஸ் அல் காய்மா பகுதியில் பணிபுரிந்து வந்தார். பல்வேறு தன்னார்வ பணிகளில் தம்மை அவர் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

தாம் குடியிருந்த ராஸ் அல் காய்மா பகுதியில், சந்தீப் பல்வேறு பொதுச்சேவைகளில் இறங்கி பல நல்ல காரியங்களை செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து ரத்ததான முகாம்களை நடத்தி வந்த அவரின் சேவையை பாராட்டி, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ம் ஆண்டு கவுரவித்து சான்றிதழ் ஒன்றையும் வழங்கியுள்ளது.
அதுதவிர, 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஊனமுற்று பின்னாளில் உயிரிழந்த இந்திய தொழிலாளி ஒருவரின் குடும்பத்துக்கு 4 லட்சம் நிவாரண தொகையை சந்தீப் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், தங்கியிருந்த தமது இல்லத்திலேயே அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரை மாய்த்து கொள்ளும் போது, உடன் தங்கியிருந்த மற்ற இருவரும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சந்தீப், டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வந்ததாகவும், அதில் போதிய வருவாய் இல்லாமல் அவர் சிக்கலில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடன் தொல்லையால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும்,சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான அரசு நடவடிக்கைகளுக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications