துபாய் ஏர்போர்ட் மீது தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உட்பட 4 பேர் காயம்! உச்சத்தை எட்டும் ஈரான் போர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இதர வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஓர் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே 2 ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதனால் ஏற்பட்ட தீ மற்றும் அதிர்வு பாதிப்புகளில் 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

ட்ரோன் தாக்குதல்
இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது x பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "துபாயில் புதன்கிழமை அன்று, விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவத்தில், ஒரு இந்தியர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதில் இந்திய நாட்டவருக்கு மிதமான காயங்களும், இரண்டு கானா மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியர் காயம்
உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் துபாய் விமான நிலையம் முதலிடத்தில் இருக்கிறது. இது மேற்கு நாடுகளையும், கிழக்கு நாடுகளையும் இணைக்கும் முனையமாக செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் போர் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா வருவாயை பாதித்திருக்கிறது.
சிக்கலில் வளைகுடா நாடுகள்
அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இப்போது வரை அமெரிக்கா சார்பு நிலையில்தான் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளின் ராணுவ மையங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இடைமறித்து தடுத்துள்ளன. ஆனால் முழுமையாக தடுக்க முடியவில்லை. எனவே துபாய் நகரத்திலிருந்து மொத்த சுற்றுலா பயணிகளும் உடனடியாக வெளியேறியிருக்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு
எப்போதும் பரபரப்பாக இருக்கும் துபாய் நகரம், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மறுபுறம் இந்த மோதல் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.
-
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள்












Click it and Unblock the Notifications