Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் குளிருடன் கூடிய பலத்த காற்று + புழுதி புயல்! குவைத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாறிய காலநிலை!

Subscribe to Oneindia Tamil

குவைத்: அரபு நாடுகளில் வழக்கமாக வெயில்தான் மண்டையை பிளக்கும் என்றும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது குவைத்தில் கடும் குளிருடன் கூடிய பலத்த காற்று மற்றும் புழுதி புயல் வீசும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே குவைத் வாழ் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குவைத் முழுவதும் வடமேற்கு திசையில் இருந்து, மணிக்கு 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக. மணல் துகள்கள், தூசிகள் சாலையை ஆக்கிரமிக்கும். எனவே வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும். புழுதி புயல் காரணமாக சாலைகளில் பார்வை திறன் 1,000 மீட்டருக்கும் குறைவாக குறையும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

Kuwait weather

புழுதி புயல் + வெப்பநிலை சரிவு

பாலைவனப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மணல் சூழ்ந்துள்ளதால், சில இடங்களில் பார்வைத் திறன் சுத்தமாக இல்லாமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைப்போல புழுதி புயல் மட்டுமல்லாது, குவைத்தில் வெப்பநிலையும் கடுமையாக குறையும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

உறைபனி

அதாவது வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறைந்து, கடும் குளிரை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக தண்ணீர் 0 டிகிரி செல்சியஸில் பனிக்கட்டியாக மாறும். எனவே, பாலைவன பகுதிகளில் அதிகாலை 1.30 மணி முதல் 8:30 மணி வரை உறைபனி உருவாக வாய்ப்புள்ளது. எனவே கால்நடைகளை வைத்திருப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடல் பகுதிகளிலும் வானிலை மோசமாக இருக்கிறது. குறிப்பாக அரேபியா வளைகுடாவில், அலைகள் 6-7 அடி உயரம் வரை எழ கூடும் என்றும், சிறிய படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

புழுதி புயல் காரணமாக, சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாமல் வெளியே செல்பவர்கள், N95 முக கவசங்களை அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முன் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதுமான இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உதவி எண்

அதேபோல பால்கனி அல்லது வீட்டின் வெளிப்பகுதியில் காற்றில் பறக்கக்கூடிய குடைகள், பிளாஸ்டிக் நாற்காலிகள் போன்ற பொருட்கள் இருந்தால் அவற்றை வீட்டிற்குள் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புழுதி புயல் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 112 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வளிமண்டல அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள, ஆழ்ந்த மேற்பரப்பு குறைந்த அழுத்த மண்டலம்தான் இந்த கால நிலைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+