ரோஹித்-ராகுல் அதிரடி சரவெடி ஜோடி... இருவரும் புரிந்துக்கொண்டு விளையாடினோம்.. ராகுல் பேட்டி
ஆப்கனுக்கு எதிராக அதிரடி சரவெடி ஆட்டத்தால் நோ லாஸில் 140 ரன்களை குவித்த ராகுல்-ரோகித் ஜோடி பெருத்த எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. இதன்மூலம் மீண்டும் இருவரும் வலுவான ஜோடி என நிரூபித்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு ஆடியதால் சிறப்பாக ஆடமுடிந்தது என கே.எல்.ராகுல் பேட்டி அளித்துள்ளார்.

வெளுத்து வாங்கிய இந்தியா
இந்தியா டாஸில் தோற்றதால் டாஸில் வென்ற ஆப்கன் பேட்டிங்கை இந்தியாவுக்கு ஒதுக்கியது. முதலில் பேட்டின் செய்த இந்தியா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பவர்பிளேயில் இதுவரை இல்லாத அளவு ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து 53 ரன்களை எடுத்தனர்.
12வது ஓவரில், ரோஹித் ஷர்மா தனது அரை சதத்தை எட்டினார், பின்னர் அதே ஓவரில் கேஎல் ராகுல் சிக்ஸரை விளாசினார், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர்.

140 ரன்கள் நோ லாஸ்
15 ஓவர் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 15வது ஓவரில் ரோஹித் ஷர்மாவை கரீம் ஜனத் வெளியேற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் இறுதியாக நிம்மதி பெருமூச்சு விட்டனர், அதைத் தொடர்ந்து 17வது ஓவரில் கே.எல்.ராகுலின் விக்கெட்டை நயீப் வீழ்த்தினார். தொடக்க வீரர்கள் 140 ரன்கள் சேர்த்தனர்.
கடைசி இரண்டு ஓவர்களில், ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி 35 ரன்கள் குவித்ததால், கேர்பேஜ் தொடர்ந்தது மற்றும் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணியை 210 ரன்களுக்கு கொண்டு வந்தது.

ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டோம்
யாராக இருந்தாலும் அடிப்பது என முடிவு செய்தோம்-ராகுல் இமாலய ரன் குவிப்பிற்கு பிறகு வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் பேட்டி அளித்தபோது கூறியதாவது:
"கடந்த மூன்று ஆட்டங்களில் நாங்கள் ஆடியதில் சிறந்த ஆட்டம் இது. தொடக்க ஆட்டக்காரர்கள் உறுதியான அடித்தளம் கொடுத்தால் ஆட்டம் சிறப்பாக இருக்கும், அதைத்தான் நானும் ரோஹித்தும் செய்ய முயற்சித்தோம். எனது பேட்டிங் செயல் திறன் அதிகரித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

ராகுல்
நீண்ட நேரம் நாங்கள் ஒன்றாக விளையாடினோம். ஒன்றாக, விக்கெட்டுகளுக்கு இடையே ஓடினாலும், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறோம், என்று ராகுல் இன்னிங்ஸுக்குப் பிந்தைய உரையாடலில் கூறினார்.
"நான் நல்ல ஆட்டத்தை தர முயற்சித்தேன். பந்திடம் சிக்காமல் இருக்க முயற்சித்தேன். பந்துவீச்சாளரை கண்டுக்கொள்ளாமல் சிறப்பாக விளையாட வேண்டும், எங்களிடம் விக்கெட்டுகள் வேறு இருந்தன, எனவே அது ரஷித் கான் அல்லது வேறு யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆட முடிந்தது. அதனால் ஆப்கனின் நம்பர் 1 பந்துவீச்சாளரிடமிருந்து ரன்களைப் பெறுவது மகிழ்ச்சியாக இருந்தது என்று ராகுல் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications