மரணப்படுக்கையில் தாய்.. இந்தியாவிற்கு எதிராக சளைக்காமல் பேட்டை தூக்கிய பாபர்.. உருக்கமான பின்னணி
துபாய்: இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆடிய போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் தாயார் மருத்துவமனையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக ஆடி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை மட்டுமின்றி அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் கெத்து காட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் மிக சிறப்பான, வலிமையான அணியாக பாகிஸ்தான் உருவெடுத்து வருகிறது. பாகிஸ்தான் அணி இதனால் மற்ற அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையை
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆடிய போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் தாயார் மருத்துவமனையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் வெற்றிபெற்ற போட்டியில் பாபரின் பேட்டிங்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

தாயார்
இந்த நிலையில் பாபர் அந்த மேட்சில் ஆடிய போது, அவரின் தாயார் வெண்டிலேட்டர் உதவியோடு மருத்துவமனையில் ஐசியூவில் இருந்ததாக பாபரின் அப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாபரின் அப்பா ஆசம் சித்திக் தெரிவித்துள்ள கருத்தில், பாபரின் தாயார் அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

போராட்டம்
அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் பாபர் அதை பற்றி யோசிக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். பாபர் மிகுந்த வேதனையில் இருந்தார். அந்த வேதனையில்தான் அவர் ஆடினார். இந்தியா மேட்ச் மட்டுமின்றி மூன்று போட்டியிலும் பாபர் மிகுந்த வேதனையில்தான் இருந்தார்.

வேதனை
அவர் கடும் மனக்கஷ்டத்திலும் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தினார், என்று பாபரின் அப்பா சித்திக் ஆஸம் கூறியுள்ளார். தனது தயார் உயிருக்கு போராடிய போதும் இந்தியாவிற்கு எதிராக பாபர் அபாரமாக ஆடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாபரின் தாயார் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் முடிந்த நிலையில் அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications