பற்றி எரியும் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம்! ஐக்கிய அமீரகத்தை தாக்கிய ஈரான் டிரோன்கள்.. பதற்றம்
துபாய்: மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது. இப்போது ஐக்கிய அமீரகம் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான துபாய் தூதரகம் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது நாளாகத் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரானின் மற்ற தலைவர்களைக் குறிவைத்து அமெரிக்கா- இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானும் அதற்குக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலை குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல மற்றொரு பக்கம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இதற்கிடையே இப்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடும் வெடிச்சத்தம் கேட்டது. அங்கு ஈரான் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications