ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காலவரையற்ற ஊரடங்கு.. சவுதியின் சில பகுதிகளில் லாக்டவுன்
சவுதி: கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வருவதால் பொதுப் பகுதிகளில் கிருமி நீக்கம் உள்ளிட்ட சுத்தப்படுத்தும் பணிகள் செய்வதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. மேலும் சவூதி அரேபியா ஜெட்டாவின் சில பகுதிகளை லாக்டவுன் செய்துள்ளது.
Recommended Video
முதன்முதலில் அரபு அமீரகத்தில் மார்ச் 26ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 5 வரை அது நீடிக்கப்பட்டது. இப்போது தேதி குறிப்பிடாமல் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெருக்களில் கிருமி நாசினி தெளித்தல், பூங்காக்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் கிருமிநாசினி தெளிக்க வேண்டியிருப்பதால், இரவு 8 மணி முதல் இயங்குகிறது காலை 6 மணி வரை, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனம் WAM வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தாமதமாகத்தான் இந்த செய்தி வெளியானது.
"சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை தேசிய கிருமிநாசினி திட்டத்தின் தொடர்ச்சியை அறிவித்துள்ளன" என்று WAM செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்று அதில் சொல்லப்படவில்லை.
ஏப்ரல் 1 முதல் கொரோனா வைரஸ் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அமீரக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வீட்டை விட்டு வெளியேறும்போது மக்கள் முகமூடி அணியுமாறு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைக்கிறது என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று, கடந்த 24 மணி நேரத்தில் 241 நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் 1,505 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10 ஆகவும் உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சவுதி அரேபியாவில், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சனிக்கிழமை தொடங்கி ஜெட்டாவின் 7 சுற்றுப்புறங்களில் லாக்டவுன் மற்றும் ஒரு பகுதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் சனிக்கிழமை வரை 2,179 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். 29 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications