காசு வேறு எங்கிருந்து வரும்? ஓய்விற்கு பின் ஓப்பனாக பேசிய ரவி சாஸ்திரி.. ஐபிஎல் பற்றி பரபர பேட்டி!
துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. முதல்முறை ஆஸ்திரேலியா இதில் கோப்பையை வென்றுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி செமி பைனல் கூட செல்லாமல் தோல்வி அடைந்துள்ளது.
Recommended Video
2021 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல் போட்டிகள்தான் காரணம் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடியதால் அவர்கள் சோர்வு அடைந்துவிட்டதாகவும், உலகக் கோப்பை போட்டிகளில் அவர்களால் சரியாக ஆட முடியவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. பும்ரா போன்ற வீரர்கள் கூட பயோ பபுள் குறித்து பேசி இருந்தார்.

பும்ரா
பும்ரா அளித்த பேட்டியில், நாங்கள் 6 மாதமாக வெளியே இருக்கிறோம். ஒரு பபுள் விட்டு இன்னொரு பபுளுக்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் நீண்ட காலம் பபுளில் இருப்பதும், வீட்டை விட்டு தொடர்ந்து வெளியே இருப்பதும் ஒரு வகையில் அணி வீரர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். மன ரீதியான சோர்வை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிசிசிஐ எங்களை நன்றாக பார்த்துக்கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது, என்று பயோ பபுள் குறித்தும், தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவது குறித்தும் பேசி இருந்தார்.

சாஸ்திரி
இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இணையத்தில் பலர் ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஐபிஎல் போட்டிகள் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார்.

ஐபிஎல்
அவர் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் என்பது மிக மிக முக்கியமானது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படவில்லை. ஐபிஎல் என்பது மற்ற பார்மெட்கள் பெரிதாக வளர காரணமாக இருந்தது. பிசிசிஐக்கு வருமானம் கொடுத்தது. இதில் இருந்து வந்த பணம் மற்ற பார்மெட்களில் முதலீடு செய்ய பிசிசிஐக்கு உதவி செய்தது.

நிதி
அதேபோல் முதல் தர போட்டிகள் தொடங்கி அனைத்திலும் அதிக நிதி முதலீடு செய்ய ஐபிஎல்தான் உறுதுணையாக இருந்தது. பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. இளம் வீரர்களுக்கு அடையாளம் கொடுத்தது. பலர் பார்மிற்கு திரும்ப இதுவே காரணமாக இருந்தது.

பயோ பபுள்
பயோ பபுள் விதிகளில் மாற்றம் வேண்டுமானால் கொண்டு வரலாம். இதனால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 24 மாதமாக வீரர்கள் பயோ பபுளில் இருப்பது மிகவும் கடினம். அவர்களுக்கு பிரேக் தேவை. ஆனால் ஐபிஎல் போட்டிகளும் முக்கியமானது என்பதை உணர வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications