கொடுமுடி காசிபாளையம் காவிரியாற்றில் மூழ்கி 3 பேர் பலி.. ஆழமான பகுதியில் சிக்கியதால் நடந்த துயரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் காவிரியாற்றில் மூழ்கிய 3 பேர் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் காவிரியாறு பாய்கிறது. பொதுவாகவே காவிரியில் நிறைய தண்ணீர் ஆர்ப்பரிக்கும். இந்த முறை தென் தமிழகத்தில் மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காவிரி, வைகை, பவானி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீரின் வேகம் அதிகமாகவே உள்ளன.

இந்த நிலையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதை அடுத்து ஆற்றங்கரைகளில் மக்கள் பூஜைகளை செய்து புது திருமாங்கல்யத்தை மாற்றுகிறார்கள். மேலும் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என காவிரி அன்னையை வழிபட்டு பலர் பயிர் வைக்கும் பணிகளையும் செய்தனர்.
இந்த நிலையில் காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். காவிரி ஆற்றில் மூழ்கி கொந்தாளம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (18), சவுத்ரி (14), குப்புராஜ் (17) ஆகியோர் பலியாகிவிட்டனர். இது குறித்து கொடுமுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் காவிரியாற்றின் வேகம் அதிகரித்தது. இதில் அந்த மூவரும் இழுத்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவத்தில் சவுத்ரியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மற்ற இருவரது உடலை கொடுமுடி தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள். காசிபாளையத்தில் மலேசிய முருகனை போல் பெரிய முருகன் சன்னதியும் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறும்.












Click it and Unblock the Notifications