கொடுமுடி காசிபாளையம் காவிரியாற்றில் மூழ்கி 3 பேர் பலி.. ஆழமான பகுதியில் சிக்கியதால் நடந்த துயரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் காவிரியாற்றில் மூழ்கிய 3 பேர் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் காவிரியாறு பாய்கிறது. பொதுவாகவே காவிரியில் நிறைய தண்ணீர் ஆர்ப்பரிக்கும். இந்த முறை தென் தமிழகத்தில் மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காவிரி, வைகை, பவானி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீரின் வேகம் அதிகமாகவே உள்ளன.

இந்த நிலையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதை அடுத்து ஆற்றங்கரைகளில் மக்கள் பூஜைகளை செய்து புது திருமாங்கல்யத்தை மாற்றுகிறார்கள். மேலும் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என காவிரி அன்னையை வழிபட்டு பலர் பயிர் வைக்கும் பணிகளையும் செய்தனர்.
இந்த நிலையில் காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். காவிரி ஆற்றில் மூழ்கி கொந்தாளம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (18), சவுத்ரி (14), குப்புராஜ் (17) ஆகியோர் பலியாகிவிட்டனர். இது குறித்து கொடுமுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் காவிரியாற்றின் வேகம் அதிகரித்தது. இதில் அந்த மூவரும் இழுத்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவத்தில் சவுத்ரியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மற்ற இருவரது உடலை கொடுமுடி தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள். காசிபாளையத்தில் மலேசிய முருகனை போல் பெரிய முருகன் சன்னதியும் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறும்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications