கொலையில் முடிந்த குழாயடி தகராறு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு: ஈரோட்டில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகாறில் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆரண்புதூர் அருகே உள்ள மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் சித்துராஜ் (33). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள பொதுக்குழாயில் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலை முடித்துவிட்டு வந்த சித்துராஜ், அந்தக் குழாயில் வைக்கப்பட்டிருந்த குடத்தை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு கை, கால்களை கழுவினார்.

தனது குடத்தை எடுத்து வைத்ததால் ஆத்திரமடைந்த பானுமதி (47), சித்துராஜை திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பானுமதியின் மருமகன் ரங்கநாதன், சித்துராஜை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படவே, தான் வைத்திருந்த கத்தியை எடுத்த சித்துராஜ், ரங்கநாதனை குத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாதனின் மாமியார் பானுமதி, மனைவி சிவரஞ்சனி, சகோதரி சித்ரா உள்ளிட்டோர் சித்துராஜை தாக்கியதுடன் அவரிடம் இருந்த கத்தியை பறித்து அவரை குத்தியுள்ளனர். இதில் சித்துராஜ் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். இதனால் பயந்து போன பானுமதி குடும்பத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சித்துராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சித்துராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து பானுமதி, சிவரஞ்சனி, ரங்கநாதன், சித்ரா, சகுந்தலா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், சித்துராஜை கொலை செய்ததற்காக குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக 3 மாதம் குற்றவாளிகள் சிறையில் இருக்க நேரிடும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications