ஈரோட்டில் ஏடிஎம்மில் புகுந்த நபர்.. அடுத்த நிமிடம் பார்த்த வேலை.. சேலத்தில் தூக்கிய தனிப்படை
ஈரோடு: ஈரோடு பெரியார்நகர் ஈ.வி.என். ரோட்டில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையம் மற்றும் ஸ்டோனி பாலம் அருகில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையங்களில், கடந்த 12-ந்தேதி மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்துள்ளனர. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் பெரும்பாலும் நிரப்பப்பட்டிருக்கும். அப்படிநிரப்பப்பட்ட ஏடிஎம்களை சிலர் கொள்ளையடிக்க முயற்சிப்பது நடக்கிறது. உண்மையில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை கொள்ளையடிப்பது அல்லது ஸ்கேமர் கருவிகளை பொருத்தி திருடுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. அப்படி ஏதாவது செய்தால், சிசிடிவி கேமராவில் வரும் காட்சிகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளை அடையாளம் கண்டு, உடனே போலீசுக்கு எச்சரிக்கை செல்லும். காவல் துறையினர் உடனடியாக வந்து அந்த நபரை கைது செய்துவிடுவார்கள்.

அதேபோல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, வேறு இடத்திற்கு எடுத்து சென்று பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தாலும் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். அவ்வளவு எளிதாக உடைத்து எடுத்து வாகனத்தில் எடுத்து சென்றுவிட முடியாது. அதேநேரம் சிலர், குடிபோதையில் அல்லது ஏடிஎம் இயந்திரம் குறித்த புரிதல் இன்று, விபரீதமாக யோசிப்பார்கள். சுத்தியல் அல்லது ஆயுதத்துடன் சென்று பணத்தை கொள்ளையடிடிக்க முயற்சி செய்து மாட்டிக் கொள்வார்கள் . அப்படி ஒருசம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் ஈ.வி.என். ரோட்டில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையம் மற்றும் ஸ்டோனி பாலம் அருகில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையங்களில், கடந்த 12-ந்தேதி மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையனை விரைந்து பிடிக்க ஈரோடு டவுன் போலீசார் தனிப்படை அமைத்து, ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்தநிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாட்லி பகுதியை சேர்ந்த பிரிட்டாம் சர்கி (வயது 39) என்பதும், அவர் சேலத்தில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சேலம் விரைந்து சென்று, பிரட்டாம் சர்கியை கைது செய்தனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications