லிட்டர்கணக்கில்.. பாலை நடுரோட்டில் கொட்டி.. ஆவின் VS பால் உற்பத்தியாளர்கள்.. என்னதான் நடக்குது?
பாலுக்கு ஊக்குத் தொகை வழங்ககோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால் உற்பத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
ஈரோடு: பால் உற்பத்தி விவசாயிகளுடன் தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சில இடங்களில் பாலை ரோட்டில் கொட்டியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. இதில் ஆவின் நிறுவனம் 36 லட்சம் லிட்டர் பாலைதான் கொள்முதல் செய்கிறது. இதற்கு முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாக பால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆக இதுதான் இவர்கள் மத்தியில் எழுந்த முதல் அதிருப்தி. இரண்டாவதாக கொள்முதல் விலை. சரி பாலைதான் குறைவாக கொள்முதல் செய்கிறீர்களே கொள்முதல் விலையையாவது தனியாருக்கு சமமாக கொடுங்கள் என்று கொரிக்கை வைத்தனர்.
மனு எழுதி, கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தி, ஆர்பாட்டம் நடத்தி, அது போராட்டமாக உருவம் பெற்று கடைசியாக வேலை நிறுத்தத்தில் பால் உற்பத்தியாளர்கள் இறங்கியுள்ளனர். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் ஆவினுக்கு பால் தர மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் உற்பத்தியாளர்கள் சில கோரிக்கைகளை கறாராக வைத்தனர்.

ஊக்கத்தொகை
அதாவது தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42-45, எருமை பாலுக்கு ரூ.65 என கொடுக்கின்றனர். ஆனால் ஆவின் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.42 மட்டுமே வழங்குகிறது. எனவே ஆவினில் பால் விநியோகிக்கும் எங்களுக்கு 7 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒருவேளை ஆவின் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தால் எல்லா பால் உற்பத்தியாளர்களும் தனியாரை நோக்கி நகர்வார்கள். பின்னர் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிடும். இதற்காக ஆவினை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறியிருந்தனர்.

ஆவின்
மேலும், ஆவினில் இருக்கும் கட்டமைப்பை போல தனியாரிடம் அடிப்படை கட்டமைப்புகள் கிடையாது என்றும் உற்பத்தியாளர்கள் விளக்கியுள்ளனர். ஆவின் நிறுவனமானது தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிங்கள் மற்றும் கடைசியாக இணையம் என மூன்று அடுக்குகளாக செயல்படுகிறது. இதில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்கின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9,376 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கை தனியார் வசம் கிடையாது. ஆனால் இப்படி இருந்தும் குறைவான அளவில், குறைவான விலையில் பால் கொள்முதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சங்கத்தின் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்னர்.

பால் உற்பத்தி
இதுதான் பால் உற்பதி செய்யும் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் அரசு இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நாளை முதல் திட்டமிட்டபடி பால் விநியோக நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் நாளை முதல் விநியோகிக்க மாட்டோம் என்றும் எனவே சுமார் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் தடைபடும் என்றும் சங்கத்தினர் எச்சரித்தனர். அதன்படி இன்று போராட்டம் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பாலை ரோட்டி கொட்டி தங்களது எதிர்ப்பை பால் உற்பத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பால் தட்டுப்பாடு
ஏற்கெனவே மாலை நேரங்களில் ஆவின் பால் கிடைப்பதில்லை. அதேபோல விழா நாட்களிலும் முகுர்த்த நாட்களிலும் ஆவின் பால் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் அனுப்பாமல் இருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications