டெல்லியை போன்று தமிழகத்திலும்.. திமுகவை குறிப்பிட்டு விமர்சித்து பகீர் கிளப்பிய பாஜக துணை தலைவர்
ஈரோடு: தமிழகத்தில் டெல்லி போன்று கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பதாக பா.ஜ.க தேசிய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம் குற்றம்சாட்டி உள்ளார்...
Recommended Video
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகானந்தம், "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி தெளிவாக விளக்கி உள்ளார். இந்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது.. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அமைதியாக இருக்கும் தமிழகத்தில் டெல்லி போன்று கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
தமிழகத்தில் இந்த சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் வலியுறுத்தியும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று பேரணி நடத்துகிறோம்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications