Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரக்குலையே நடுங்கிடுச்சே.. பசுமாட்டின் குடலை கிழித்த "கருப்பன்".. ரங்கசாமி கோயில் வாசலில் கபில்தேவ்

சத்தியமங்கலத்தில் கருப்பன் யானையை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இன்று இரவுக்குள் எப்படியாவது கருப்பனை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.. இதனால் சத்தியமங்கலத்தில் எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, ஆசனூர் உள்ளிட்ட வனச்சரகங்களில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன..

இதில், தாளவாடி தாலுகாவிலுள்ள பகுதிகளிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும், யானைகள் புகுந்துவிடுகின்றன. இந்த யானைகள் சில சமயம் கூட்டமாகவும், பல சமயம் ஒற்றை யானையாகவும் உள்ளே புகுந்து, விவசாய நிலங்களை அழித்து நாசம் செய்கின்றன...

கருப்பன்

கருப்பன்

கூட்டமாக வரும் யானைகளைவிட ஒற்றை யானையின் அட்டகாசம்தான் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். இந்த ஒற்றை காட்டு யானைக்கு அந்த பகுதி மக்கள் "கருப்பன்" என்று தனிப்பெயரும் வைத்திருக்கிறார்கள்.. இந்த கருப்பன், மனிதர்களையும் வேட்டையாடிவிடுவது தொடர்கதையாகி வருகின்றன.. சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில், கருப்பன் நுழைந்துவிட்டான்.. பயிர்களை சேதப்படுத்தியதுடன், 2 பேரையும் மிதித்து கொன்றது...

 டீரோன் டீம்கள்

டீரோன் டீம்கள்

அதற்கு பிறகு, வனத்துறையினர் இதில் தீவிரமாக இறங்கி, அந்த கருப்பன் யானையை பிடித்து கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்தனர்.. சில நாட்கள் கழித்து மறுபடியும் கருப்பன் அட்டகாசம் இதே பகுதிக்குள் ஆரம்பமாகிவிட்டது.. விளைநிலங்களை பாழாக்கி கொண்டிருக்கிறது. அதனால் இந்த கருப்பனை பிடிப்பதற்காக, மறுபடியும் வனத்துறையினர் களமிறங்கி உள்ளனர்.. கருப்பன் யானையின் நடமாட்டத்தை டிரோன் கேமராக்களின் உதவியுடன் கண்காணிப்பு நடந்து வருகிறது.. இதற்காக 4 டிரோன் கேமரா டீம்களை களத்தில் இறக்கப்பட்டுள்ளது. கருப்பனுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அதற்கு பிறகு, காட்டுக் கொண்டு சென்றுவிட பிளான் செய்துள்ளனர்..

 கேப்டன் கலீம்

கேப்டன் கலீம்

இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிலிருந்து கலீம், முத்து, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.. ரங்கசாமி கோயில் பக்கத்தில் முத்துவும், கபில்தேவ், கலீமும் நின்று கொண்டிருக்கின்றன. இந்த 3 யானைகளில் கலீம்தான் கேப்டனாம்.. கலீமுடன் சேர்ந்து முத்து, கபில்தேவ்வை வைத்துதான் இந்த ஆபரேஷனை அதிகாரிகள் செய்யப்போகிறார்கள். 4 வன கால்நடை மருத்துவர்கள் ரெடியாக இருக்கிறார்கள்.. மேலும், 150 வனப்பணியாளர்களும் கருப்பனை பிடிக்க மும்முரமாகி உள்ளனர். இப்படி அதிகாரிகள் ஒருபக்கம் திட்டமிட்டு கொண்டிருக்கும் அதேசமயம், கருப்பன் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகிறது..

 3 கும்மிகள்

3 கும்மிகள்

நேற்று முன்தினம் இரவு மரியபுரம், ஜோரகாடு, மற்றும் ரங்கசாமி கோவில் வழிதடத்தில் வனத்துறையினர் 3 கும்கிகளுடன் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வரவில்லை.. அதனால், நேற்றிரவு, மல்குத்திபுரம் பகுதியில் கண்காணித்தபோது, அங்கே கருப்பனை கண்டுபிடித்துவிட்டனர்.. இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றி வளைத்தனர்...

 எகிறி தப்பித்தனர்

எகிறி தப்பித்தனர்

ஆனால் கருப்பனுக்கு மயக்கஊசி செலுத்தவே முடியவில்லை.. மாறாக, மருத்துவகுழுவினரை பார்த்ததுமே கருப்பன் துரத்த ஆரம்பித்துவிட்டது.. இதனால் மொத்த பேரும் பதறிக்கொண்டே ஓடினார்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.. அதற்கு பிறகு கருப்பன் அங்கிருந்து எகிறியது.. மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன்பு, கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது... இதில் மாட்டின் குடல் வெளியே வந்துவிட்டது.. அந்த பசுமாடு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.. எப்படியும் கருப்பனை இன்று இரவுக்குள் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கையாக சொல்கிறார்கள் வனத்துறையினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+