ஈரோடு கல்லூரியிடம் ஐந்து லட்சம் வாங்க போகும் மாணவி.. என்ன நடந்தது.. மாணவர்கள் அறிய வேண்டியவை
ஈரோடு: ஈரோட்டில் படிக்க சேர்ந்த கல்லூரியிடமே ஒரு பெண் ஐந்து லட்சம் வாங்க போகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கரடிசித்தூர் தாவழப்பட்டுரோடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி, தனியார் கல்லூரி ஒன்றில் படித்துள்ளார். அந்த கல்லூரியில் அவர் படிக்க சேர்ந்த ஒரே மாதத்தில் படிக்க போகவில்லை.. அவருக்கு அசல் சான்றிதழ்களை திரும்ப தராத புகாரில் கல்லூரி நிர்வாகம் ஐந்து லட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று ஈரோடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கரடிசித்தூர் தாவழப்பட்டுரோடு பகுதியை சேர்ந்த பிரம்மதேவன் என்பவருடைய மகள் பிரியதர்ஷினி, ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள ஜே.கே.கே. முனிராஜா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் படிக்க விரும்பியுள்ளார்.

இதன்படியே ஜே.கே.கே. முனிராஜா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் கடந்த 2023-ம் ஆண்டு பி.பார்ம் படிப்பில் சேர்ந்துள்ளார் மாணவி பிரியதர்ஷினி. ஒரு மாதம் மட்டும் கல்லூரிக்கு சென்றார். அதன்பிறகு அவரது தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் பிரியதர்ஷினி கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.
மேலும், தந்தையை கவனித்து கொண்டே அருகில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பை தொடர அவர் விரும்பினாராம். இதனால் கல்லூரியில் தனது அசல் கல்வி சான்றிதழ்களை திருப்பி தரும்படி கேட்டு உள்ளார். அதற்கு 3 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகுதான் சான்றிதழ்கள் தர முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இந்தநிலையில் தனது சான்றிதழ்களை திருப்பி வழங்க உத்தரவிடக்கோரி ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிரியதர்ஷினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று தீர்ப்பு கூறியது.
அதில், பாதிக்கப்பட்ட மாணவி பிரியதர்ஷினிக்கு 15 நாட்களுக்குள் எந்தவித தொகையும் பெறாமல் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.. மாணவிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் இழப்பீடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாணவர் எதிர்பாராத காரணங்களால் (உடல் நலக்குறைவு, குடும்பத்தில் அவசர நிலை, நிதி நிலை சிக்கல்) கல்லூரியில் படிக்கும் போது, பாதியில் வெளியேற நேரிட்டால், அசல் சான்றிதழ்களைத் திருப்பி அளிப்பதற்காக மீதமுள்ள முழு கல்வி ஆண்டிற்கான கட்டணத்தையும் செலுத்தும்படி நிபந்தனை விதிப்பது சட்டவிரோதம் ஆகும். அந்த அடிப்படையில் தான் மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications