போட்ரா வெடிய..ஈரோடு கிழக்கில் கொண்டாட்டம் ஆரம்பம்..ஈவிகேஎஸ் இளங்கோவன் கை ஓங்குகிறது..
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வருவதை அடுத்து திமுக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். காங்கிரஸ் கை ஓங்கி வருவதால் முதல் சுற்று முடிவிலேயே வெற்றி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 75 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட 9 சதவிகித வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவனித்தனர். துணி துவைத்துக்கொடுத்து, பாத்திரம் துலக்கி கொடுத்து கூட வாக்கு சேகரித்தனர். பரிசுகளை அள்ளிக்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு கடும் வெயிலையும் கருத்தில் கொள்ளாமல் இரவு வரை காத்திருந்து வாக்களித்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைத்தனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டன. பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படுகின்றன.
முதல் சுற்று முடிவிலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னணியில் இருந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 9124 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக 2868 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 327 வாக்குகளும், தேமுதிக 17 வாக்குகளும் மட்டுமே பெற்றிருந்தது.

வாக்கு வித்தியாசம் படிப்படியாக அதிகரித்து வருவதால் திமுக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இப்போதே வெற்றிக்கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். பல பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெற்றி முழக்கமிட்டு வருகின்றன.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications