Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்..வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது..நாளை பரிசீலனை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.10ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மாலையுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். 10ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாளாகும்.அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Erode East by poll: Filing of nomination completed today consideration tomorrow

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் சுயேட்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். முதல் நாளில் 4 சுயேட்சைகள் மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது நாளில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உள்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக நடந்த வேட்பு மனு தாக்கலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று 4வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க வேட்பாளர் சிவ பிரசாந்த், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி இளையராணி, அவர்களது ஒரே மகள் சத்யா ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தனர்.

சனிக்கிழமையன்றும் திங்கட்கிழமையன்று சில சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் 6 நாட்கள் வேட்புமனு தாக்கல் நிலையில் நேற்று மாலை வரை 61 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

Erode East by poll: Filing of nomination completed today consideration tomorrow

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னரசு இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை70க்கும் மேற்பட்டோர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இரண்டு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் அதிமுக வின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.

Erode East by poll: Filing of nomination completed today consideration tomorrow

இதனையடைத்து ஒப்புதல் கடிதங்களை பெற்றுக் கொண்டு தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் ஆகியோர் தேர்தல் ஆணையரை சந்தித்து மனுக்களை சமர்பித்தனர்.
2501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக கடிதம் அளித்தனர். இதனையடுத்து தென்னரசு அதிகாரப்பூர்வமான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

ஓ.பன்னீர் செல்வத்தால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு பாஜக தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் நேரடி போட்டியில் இருந்தாலும் திமுக படு பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சார களம் இனி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+