ஈரோடு கிழக்கில் யார் எம்எல்ஏ? நாளை ரிசல்ட்..15 ரவுண்டுகள்..பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி வெற்றி சான்றிதழ் வழங்கும் வரை சுமூகமாக அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்தது. வாக்காளர்கள் வசமாக கவனிக்கப்பட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு 27ஆம் தேதி நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ச் 2ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும், என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார். 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கிருஷ்ணன் உன்னி கூறினார்.
நாளை காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் சித்தோடு போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆய்வு செய்தார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு காவல் துறை சார்பில் 750 காவல்துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் மேலும் ஸ்டராங் ரூம் கண்கானிக்க இரண்டு குழு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் எனவும் கூறினார். இது மட்டுமல்லாமல் துணை ராணுவ படையினர், சிறப்பு காவல் பிரிவினர் ஆகியோர் இரண்டாம்,மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனோடு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்கான அறிவுரைகள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் சுமூகமான முறையில் நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை சார்பில் எடுத்து இருக்கிறோம் எனவும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெரும் வரை பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம் எனவும் காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்று ஆளும் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியோ, வெற்றி தங்களுக்குத்தான் கிடைக்கும் என்று உறுதியாக கூறி வருகிறார். தென்னரசுவா? ஈவிகேஎஸ் இளங்கோவனா? ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்எல்ஏ யார் என்று நாளை தெரிந்து விடும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications