Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து மாணவிகளின் நலனுக்காக.. பள்ளியில் கந்த சஷ்டி பாட அனுமதி கொடுங்க! இந்து முன்னணி கலெக்டரிடம் மனு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இந்து மாணவிகளின் நலனுக்காக என்று இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு பேசுபொருள் ஆகி உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருந்தது அனைவருக்கும் நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

இதனால் பல வாரங்கள் அங்குப் பதற்றமான ஒரு சூழல் காணப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், இப்போது தான் அந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

மனு

மனு


தமிழ்நாட்டில் நல்வாய்ப்பாக அதுபோன்ற சிக்கல் எதுவும் வரவில்லை. இதனிடையே ஈரோட்டில் முன்னாள் திமுக கவுன்சிலர் சந்திரசேகர் கருங்கல்பாளையம் பள்ளி ஆசிரியருக்குத் தொழுகை நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாகக் கடிதம் எழுதி இருந்தார். இதனிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்து முன்னணியினரும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

 திமுக முன்னாள் கவுன்சிலர்

திமுக முன்னாள் கவுன்சிலர்

ஈரோடு மாநகராட்சி முன்னாள் திமுக கவுன்சிலர் சந்திரசேகர். இவர் கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், "இப்போதும் நமது பள்ளியில் இஸ்லாமியப் பெண்கள் மிகுந்த அளவில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதியம் 10 நிமிடங்கள் தொழுகை நடத்திட தாங்கள் அனுமதி வழங்கி உதவிட மாணவிகளின் பெற்றோர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 இந்து முன்னணி

இந்து முன்னணி

இருப்பினும், இந்த கோரிக்கைக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், திமுக முன்னாள் கவுன்சிலர் இப்படியொரு கோரிக்கையை வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்திற்கு எப்படி கடிதம் எழுதலாம் என்று இந்து முன்னணியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இதற்குப் போட்டியாக கலெக்டர் அலுவலகத்தில் மற்றொரு மனு அளித்தனர்.

 கலெக்டர் அலுவலகத்தில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

இந்து முன்னணியினர் ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், "வணக்கம். ஜூலை 6ஆம் தேதி, திமுக முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் என்பவர் ஈரோடு கருங்கல் பாளையம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் மிகுந்த அளவில் சேர்ந்து பயின்று வருவதாகவும், இஸ்லாமிய மாணவிகள் தினசரி மதியம் 10 நிமிடங்கள் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்வதாகக் கடிதம் எழுதியாகத் தெரிகிறது.

 அனுமதி அளித்தால்

அனுமதி அளித்தால்

இக்கடிதம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அப்படி அனுப்பி இருந்தால் தலைமை ஆசிரியரின் முடிவு என்ன? இஸ்லாமிய மாணவிகள் தொழுகை அனுமதி அளித்தால் இந்து மாணவிகளின் நலனுக்காக இந்து மாணவிகள் தினசரி மதியம் 15 நிமிடங்கள் ஹயக்ரீவர் மந்திரம், கந்த சஷ்டி பாடவும் படிக்கவும் இந்து மாணவர்களுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்

ஒரு மதத்திற்கு மட்டும் வழிபாட்டிற்குப் பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தால் பள்ளி மாணவர்களுக்கிடையே இந்து மாணவிகளின் மத சுதந்திரம் கேள்விக்குறியாகும். எனவே இந்து மாணவிகள் நன்கு படிக்கவும் தைரியமாக அச்சமின்றி படிக்கும் கந்த சஷ்டி பாடவும் படிக்கவும் தினசரி 15 நிமிடங்கள் அனுமதி அளிக்குமாறு இந்து மாணவிகள் நலன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+