மீண்டும் மீண்டுமா! ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திர அறையில் 2வது முறையாக கேமரா பழுது - பரபரப்பு
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‛ஸ்ட்ராங் ரூமில்' இன்று 2வது முறையாக சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமராவில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். தமிழகத்தில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவானது.

தேர்தல் முடிவடைந்த பிறகு ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள்ள ஸ்ட்ராங் அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 அடுக்குகளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை கட்சியின் ஏஜென்ட்டுகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் 8 மணி முதல் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராவில் பழுது ஏற்பட்டது.
இதனால் கட்சியின் ஏஜென்ட்டுகளுக்கு அறையின் உள்ளே என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் போனது. இதையடுத்து உடனடியாக தொழில்நுட்ப வல்லூனர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது தொழில்நுட்ப வல்லூனர்கள் சிசிடிவி கேமராவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கேமரா பழுதாகுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நேற்று முன்தினம் ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதியில் உள்ள பூத்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சுமார் 30 நிமிடம் வரை சிசிடிவி கேமரா செயல்படவில்லை. அதன்பிறகு சிசிடிவி கேமரா மாற்றம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது 2வது முறையாக ஈரோடு லோக்சபா தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூமில் கேமரா செயல்படாமல் போய் இருந்தது என்பது நினைவுப்படுத்த வேண்டி உள்ளது.
ஈரோடு லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டி்ல ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி), காங்கேயம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமார், திமுக சார்பில் கேஇ பிரகாஷ், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் கார்மேகம் ஆகியோர் போட்டியில் உள்ளனர். கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலில் ஈரோடு லோக்சபா தொகுதியில் 70.59 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications