துக்ளக் விழாவில் ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது... கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு
ஈரோடு: துக்ளக் ஆண்டு விழாவில் முரசொலி குறித்தும், பெரியார் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கக் கூடாது என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரச்சனைகளுக்கு உரிய கருத்துக்களை மட்டும் ரஜினி தேடி தேடி பேசி வருவதாக அவர் சாடியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

வலுக்கும் எதிர்ப்பு
துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் முரசொலி படித்தால் அவர் திமுககாரர் என்றும், துக்ளக் படித்தால் அவர் அறிவாளி எனவும் ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பெரியார் குறித்த கருத்தும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ரஜினிக்கு ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், கி.வீரமணி, கொளத்தூர் மணி, போன்றவர்கள் ரஜினிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர்.

ஈஸ்வரன் எதிர்ப்பு
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரனும் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முரசொலி பற்றி துக்ளக் விழாவில் ரஜினி பேசியிருக்கக் கூடாது என்றும், பிரச்சனைக்குரிய கருத்தை தேடிச்சென்று பேசுவதையே ரஜினி வழக்கமாக கொண்டுள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.

விமர்சனம்
அரசியல் விளம்பரத்துக்காக ரஜினி இதுபோன்ற கருத்துக்களை அண்மைக்காலமாக பேசி வருவதாகவும், பெரியாரை பற்றி பேசியதை தவிர்த்திருக்கலாம் எனவும், கூறினார். மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நீர் மேலாண்மை
தமிழக அரசு நீர் மேலாண்மை விருதை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ஈஸ்வரன், இது போன்ற விருதுகள் தான் தண்ணீர் சேமிப்பு பற்றி பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனக் கூறினார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications