ஏக குஷியில் எடப்பாடி.. இன்றே கிளைமேக்ஸ்.. 7 மணிக்கு எல்லாம் முடிகிறது.. இறுதியாகும் அதிமுக வேட்பாளர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பொது வேட்பாளர் தேர்விற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று இரவு 7 மணிக்குள் தங்களின் விருப்பமான வேட்பாளர் பெயர் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி தரப்பு கேட்டு இருந்தது.

இரட்டை இலை
இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை, என்று கூறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று விசாரணை நடந்து வந்தது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்டது.

இடைக்கால உத்தரவு
அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போடப்பட்டது.

தீர்மானம்
இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்யும் அதிமுக ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்து போட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவருக்கான அதிகாரம் வழங்கி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பாக வாக்கு சீட்டு ஒன்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வேட்பாளராக கே. எஸ் தென்னரசுவை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவரின் பெயரை டிக் அடிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

கோரிக்கை
அவர் இல்லாத பட்சத்தில் இருக்கின்ற பாக்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை அதில் குறிப்பிட முடியும். இந்த வாக்கு சீட்டுடன் தமிழ் மகன் உசேனுக்கு வேட்பளாரை தேர்வில் கையெழுத்து போட அதிகாரம் அளித்த தீர்மானமும் இடம்பெற்று உள்ளது. இந்த இரண்டும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2675 பேருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இதை பூர்த்தி செய்து இன்று மாலை 7 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

7 மணி வரை
இன்று மாலை 7 மணிக்குள் மாவட்ட செயலாளர்கள் வாயிலாக இதை அதிமுக தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பின் அதிக வாக்குகள் கொண்ட வேட்பாளரை தமிழ் மகன் உசேன் தேர்வு செய்வார். இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழுவில் எத்தனை வாக்குகள், ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்திலுக்கு எத்தனை பொதுக்குழுவில் வாக்குகள் என்பதுதான் இறுதியில் முக்கியத்துவம் பெரும். அதில் அதிக வாக்குகள் பெற்றவரை பொது வேட்பளாராக அறிவித்து, அதில் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடுவார். அவர் போடும் கையெழுத்தே இப்போது முக்கியம். பொதுக்குழு எடப்பாடி பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர். அதுவே ஓ பன்னீர்செல்வம் பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர். இவர் பொது வேட்பாளர் என்பதால் இரட்டை இலை அவருக்கே கிடைக்கும். சின்னம் முடங்காது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications